2181. தரமான பூரமது ஒன்றேயாகும் தாக்கான வெல்லமது ரண்டேயாகும்
காமான எருக்கன்பால்
தன்னாலாட்டி கரிவாகமைபோல யாட்டிமைந்தா
வேமான கற்புடைய மாதுக்கீய
வெளியாகும் ஐந்துமாத கற்பந்தானும்
சாமான மின்றி வல்லாரைதன்னில்
சட்டமுட னிக்கருவைப் போட்டிடாயே
விளக்கவுரை :
2182. போடவே கல்வமதில் இட்டுமைந்தா
பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நீடவே தானரைத்து வானபின்பு
நினைவாகப் பரணிதனிலடைத்துக்கொண்டு
கூடவே குழிவெட்டி
பூமிதன்னில் குடிலமுடன் தான்புதைத்து பின்புகேளு
ஆடவே மண்டலங்கள்
சென்றுதானால் அப்பவல்லோ காயாதிகற்பமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
2183. ஆச்சென்று விடுகாதே
மைந்தாகேளு அப்பனே மதியமுர்தம் கொண்டாயானால்
மூச்சடங்கி தன்னிலையைக்
காணலாகும் முயலான பூரணத்தை நன்னலாகும்
பேச்சென்ற சத்திசிவங்
காணலாகும் பேரான சிவபூசை அறியலாகும்
பாச்சென்ற சத்திசிவங்
காணலாகும் பராபரத்தின் சின்மயத்தின் பற்றநன்றே
விளக்கவுரை :
2184. நன்றான பேரொளியைக்காணலாகும்
நாதாந்தத் திறவுகோல் காணலாகும்
குன்றான வேதாந்தக்
கற்பமெல்லாம் கோடிக்குகோடிவரை காணலாகும்
தன்றான செங்கடுக்காய்
சேர்தானப்பா தயவுடனே தானிடித்து சார்தானீக்க
வென்றான பாகமிது
பத்துமுறைதானும் விரும்பியே தானிடித்து சூரணங்கள்செய்யே
விளக்கவுரை :
2185. செய்யவே சூரணத்தை
எடுத்துமைந்தா தினம்போது காடியினாலரைத்துமேதான்
பையவே குன்றியிடை
யுண்டுவந்தால் காலனுக்கிடமேது சாவுமேது
நொய்யவே தேகமது கற்றூணாகும்
நோக்காடுவாராது நுணுக்கமெத்த
மெய்யவே காலாங்கிநாயர்பாதம்
விருப்பமுடன் தான்பணிந்து விளம்பிட்டேனே
விளக்கவுரை :