2176. பணியவே மதியமுர்தம்
சாற்றக்கேளு கெஞ்சாவின் விரைநாற்சேரு
கணிதமுடன் சாதிக்காய்
சாதிபத்திரி கருவான கிராம்புடனே டவாட்டிமொக்கு
தணியவே வபினியுடன் கசகசாவும்
சாங்கமுடன் வகைக்கு வாருசேர்தான்பாதி
மணிபோலதான்
வறுத்துச்சூரணித்து மயங்காமல் தான்செய்யும் வகையைக்கேளே
விளக்கவுரை :
2177. கேட்கவே சர்க்கரையாய்ப்
பாகுதன்னில் கெணிதமுடன் சூரணத்தைக்கொட்டிக்கிண்டி
தாட்டிகமாய் நெய்தேனும்
விட்டுக்கிண்டி சார்பாகக் கிளறியல்லோ குளிகைபண்ணி
வாட்டமுடன் அந்திசந்தி
தானருந்தி வளமுடனே தீபவொளி கண்ணிற்றோன்றும்
நாட்டமுடன் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் நானிலத்தில் போகுவதுந் தெரியுமாமே
விளக்கவுரை :
[ads-post]
2178. தெரியுமாம் கேசரத்தில்
போகுமார்க்கம் தேசத்தில் வினோதவகை யாவுந்தோன்றும்
அரியுடனே
சிவன்முதலுங்காணலாகும் ஆகாயவதிசயங்களெல்லாந்தோன்றும்
பரியொளிபோல்
கைலங்கிரிதன்னில் காணும் பாருலகில் நீயுமொரு சித்தனாவாய்
சரியுடனே காலாங்கிநாதர்பாதம்
பணிந்துமே போகரிஷி பாடினேனே
விளக்கவுரை :
2179. பாடினேன் சத்தகாண்ட
மேழாயிரந்தான் பாரிலுள்ள மானிடர்க்குப் பண்பாகத்
தேடியே கிட்டாது
மிகவாராய்ந்து தெளிவுடனே பாடிவைத்தேன் குருநூலாக
கூடியே நல்லோரிடமுஞ்
சார்ந்து குவலயத்திலெப்போதும் இருந்துவாழ்வாய்
வாடியே யலையாதே வுண்மைகண்டு
வளமுடனே யெந்நூலை வணங்கிபோற்றே
விளக்கவுரை :
2180. போற்றவே கற்பமொன்று
புகலக்கேளு பொலிவான வல்லாரையார்காண்பார்
ஆற்றவே
வல்லாரைக்கற்பந்தானும் அவனிலே வுண்டவர்கள் மெத்தவுண்டு
நீற்றமுடன் கைபாகம்
செய்பாகந்தான் நீனிலத்தில் கண்டவரும் யாருமில்லை
மாற்றமுடன் குருவருள்கள்
பெறவேவேண்டும் பெறாவிட்டால் பூவில்லை காயில்லைதாமே
விளக்கவுரை :