2246. கண்டேனே வனந்தனிலே
மகிமைமெத்த கண்டவர்கள் விண்டவர்களாருமில்லை
அண்டமுனி ராட்சதர்கள்
அசுராள் கூட்டம் அணியணியாய் எதிர்வந்து சூழ்ந்துகொண்டார்
தண்டவனந்தன்னிலே யான்குளிகைகொண்டு
தரணியிலிறங்கியதைப் பார்த்தாரங்கே
கொண்டல் வண்ண னேகர்கள்
கர்ச்சிப்பாலே கோடானகோடி வதிசயங்கண்டேனே
விளக்கவுரை :
2247. அதிசயங்கள் மெத்தவுண்டு
அங்கேதானும் அப்பனே அசுராக்கள் கூட்டமப்பா
பதியைவிட்டு பதிதேடி
வந்தவன்யார் பாதகனாயிருக்கிறான் என்றுசொல்லி
துரிதமுடன் எந்தனிட
கிட்டவந்து துப்புரவாய் யாரென்று வினவிக்கேட்க
கரிதமுள்ள போகரிஷி
யடியேன்தானும் கலங்கியே திடுக்கிட்டு நின்றிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
2248. நின்றேனே கிடுகிடுத்து
பயந்துயேங்கி நெடுமூச்சு தானெரிந்து பயமுமுற்று
குன்றருகே நின்றுவிட்டேன்
அடியேன்தானும் கூச்சலுடன் அசுராக்கள் கிட்டியேதான்
சென்றுமே யெனையெடுத்து
விழுங்கவந்தார் சோறாமல் யானுமல்லோ வார்த்தைபேசி
வென்றுமே காலாங்கி
நாயர்பாதம் விருப்பமுடன் தாள்வணங்கி பணிந்திட்டேனே
விளக்கவுரை :
2249. பணிந்தேனே எந்தனுக்கு பட்சம்வைத்து பாரிலுள்ளவினோதமெல்லாம் காண்பித்தார்கள்
துணிவுடனே சூரியனினி
வனங்களெல்லாம் சுத்தியே வலசாரியாக வந்தேன்
அணிபெறவே யாளியுட
வனமுங்கண்டேன்
கணிதமுடன் பூமிமுதல்
அமுனையுங்கண்டேன் காலாங்கி நாதருட கடாட்சந்தானே
விளக்கவுரை :
2250. தானான வின்னமொரு
மார்க்கம்பாரு தாக்கான தாதுபுஷ்டி குளிகைகேளும்
வேனான பேரீச்சங்காய்தான்சேரு
மிக்கான ஊமத்தின் விரைதான்சேரு
பானான கஞ்சாவின் விரைதான்
சேரு பாங்கான மாதுளையின் விரைதான்சேரு
தேனான கொமட்டிவிரை
சேர்தானப்பா தெளிவான வத்திவிரை சேர்தானொன்றே
விளக்கவுரை :