2261. வேறான மாமிஷமா மடைக்கலந்தான்
வேகமுள்ள வுடும்பு முயல்கலைதானாகும்
வாறான முட்பன்றி மயிலுமாகும்
வாகான செம்புரவி வாண்குறியுமாகும்
தூரான காடைகவுதாரியாகும்
துறைமேயும் கொக்குடனே புறாவுமாகும்
தாராவாம் பெட்டையுடன்
செஞ்சேவல்தானும் சாதாவாம் குறும்பாட்டு யிறைச்சிபாரே
விளக்கவுரை :
2262. இறைச்சியாம் விலங்குடனே
யித்தனையுங்கூட்டி எழிலாக வெயிலிலுலர்த்தி சூரணித்து
முறையுடனே ஒவ்வொன்றில்
சேர்தானப்பா முயற்சியுடன் தானெடுத்து சேர்க்கக்கேளு
குறையாமல் முன்சொன்ன
சரக்கையெல்லாம் கூட்டுமுறை தப்பாமல் ஒன்றுகூட்டி
நிறையுடனே ரசவகையுந்
தப்பாவண்ணம் நினைவுடனே நெய்தேனிற் கிண்டிடாயே
விளக்கவுரை :
[ads-post]
2263. கிண்டையிலே சர்க்கரையுஞ்
சரியாய்ச் சேர்த்து கிருபையுடன் மெழுகுபதந்தனிலிறக்கி
பண்டிதமாய் நெய்தேனும்
கூடக்கூட்டிப் பாகமுடன் தானிறக்கி குளிகைசெய்து
கண்டிதமாய்
மண்டலந்தானந்திசந்தி கருவாகத் தின்றுமல்லோ கூடும்போது
வண்டினம் போல்கலவியது
மிகுதியாகி மங்கையரும் மானிலத்தில் நடுங்குவாரே
விளக்கவுரை :
2264. நடுங்குவார் மானிலத்தில் பெண்களெல்லாம்
நாணுவார் புருஷாலைக்கண்டபோது
கடுஞ்சோப மதிகமுடன்
காதல்கொண்டு கர்ச்சனைமிக வுண்டாய்கதிப்புகொண்டு
விடுமானும் கலையுடனே
கலந்தமான்போல் விடாய்பட்டு மன்மதன்போல் காதல்பூண்டு
தொடுமாதர் நான்குவித
சாதியோரை தோறாமல் அனுபவித்து பெயர்கொள்வீரே
விளக்கவுரை :
2265. கொள்ளவென்றால் பத்தியங்கள் இல்லையப்பா குணமுடனே வண்மையுள்ள பதார்த்தமெல்லாம்
தள்ளவே போகாது சதாகாலந்தான்
தாரணியிலுண்டவருக்கு பலமேழானை
விள்ளவே யுண்டாகும்
குளிகையப்பா விண்டலமு மண்டலமு மிடங்கொளாது
உள்ளபடி இக்குளிகை யார்தான்
செய்தார் உத்தமனே கருவாளிசெய்வான் பாரே
விளக்கவுரை :