2266. பாரப்பா வின்னமொரு
மார்க்கம்பாரு பாங்கான மகமேரு கிழக்கேயப்பா
நேராகத் தானிருக்கும்
பர்வதந்தான் நேர்மையுள்ள அஷ்டகிரி என்பார் சித்தர்
சாராக யானுமல்லோ
குளிகையிட்டு சட்டமுடன் சீனபதிவிட்டு யேகி
காரான கரிரோனின்
வனமுந்தாண்டி கடினமுடன் மலையோரம் சென்றேன்தானே
விளக்கவுரை :
2267. சென்றேனே யடிவாரத்தருகிலப்பா
திரளான கோடிமுனி சித்தருண்டு
குன்றினிடம் உட்சென்றேன்
யானுமங்கே குறிப்பான குத்துக்கால் ஒன்றுகண்டேன்
பற்றியெனும் பெருச்சாளி
வாகனத்தில் பாங்குடனே கணபதியும் வீற்றிருக்க
வென்றிடவே குத்துக்கல்
பிள்ளையாரை வேண்டினேன் போகரிஷி வேண்டினேனே
விளக்கவுரை :
[ads-post]
2268. வேண்டியே நிற்கையிலே
கணபதிதானும் விருப்பமுடன் போகரைத்தான் வளப்பங்கேட்டார்
தாண்டியே வனமெல்லாந்
தான்கடந்து தகமையுடன் வருவதற்கு நீதியுண்டோ
பூண்டமனதுறுதியினால்
வந்தாய்நீயும் பூலோகமானிடனும் வரலாமோதான்
மாண்டுமே போவதற்கு
சித்தர்தாமும் மன்னவனே தான்சபிப்பார் பெருமைபாரே
விளக்கவுரை :
2269. பாரேதான் என்றலுமே
கணபதிதானும் பாங்குடனே போகரிஷி திடுக்கிட்டேங்கி
நேரேதான் கணபதியை
சாஷ்டாங்கித்து நிலைமைபெற சுவாமிஎனக்கெதியேதென்ன
சாரவே என்மீதில்
பட்சம்வைத்து சாங்கமுடன் எந்தனுக்கு உபதேசித்து
சூரனாமிருக்குமிடம்
காணவென்று சுந்தரரும் வாக்களித்தார் சூட்சந்தானே
விளக்கவுரை :
2270. சூட்சமுட னுபதேசமருளும்பெற்று
சுடரொளியாம் பத்மாசூரனையுங்காண
தாட்சியுடன் இரண்டாங்கால்
வரையுமேறி தண்மையுடன் முதற்கோபுர வாசல்நின்றேன்
காட்சியுடன் சூரனது ஸ்தலமும்
கண்டேன் கைலாச சட்டமுனி சமாதிகண்டேன்
மாட்சியுடன்
கைலாசமுனிதானங்கே மார்க்கமுடன் சமாதிநிலை யறிந்திட்டேனே
விளக்கவுரை :