2271. அறிந்திட்டேன் சட்டமுனி
பாதங்காண அவ்விடத்தில் சிலநேரம் நின்றேன்யானும்
அறிந்திடவே சித்தர்முனி
கோடாகோடி தகைமையுடன் கொலுக்கூட மங்கிருந்தார்
செரிந்திடவே யடியேனை
கண்டபோது சேனைதிரள் கூட்டமுடன் கிட்டவந்தார்
புரிந்திடவே சிறுபாலா
எங்கேவந்தீர் புதுமையுடன் கேட்கலுற்றார் சித்தர்தாமே
விளக்கவுரை :
2272. தாமான சித்தர்முனி
கேட்கும்போது சாங்கமுடன் காலாங்கிதனை நினைத்து
வாமமுடன் குருசாமி
காலாங்கிதன்னை வளமையுடன்தானினைத்து துதிக்கலுற்றேன்
ஓமெனவே நாதாக்கள்
கேள்விக்கல்லோ உத்தமனுமடியேனுங் கால்நடுங்கி
சாமெனவே சீனபதி
தன்னில்யானும் சட்டமுடன் குளிகைகொண்டு வந்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
2273. வந்திட்டேன் என்றலுமே சித்தர்தாமும் வணக்கமுடன் இரண்டாங்கால் வரையிற்கொண்டு
முந்திட்டு மூலரிட பாதங்காண
முனையான சமாதியிடம் நிற்கும்போது
கந்திட்ட தேவரிஷிக்
கொப்பாஞ்சித்தர் கருவான திருவாசர் படிகார்ப்பார்கள்
தந்திட்ட வாசலது
திறக்கவென்று தாட்சியுடன் தேவரிஷி வினவிட்டாரே
விளக்கவுரை :
2274. வினவையிலே சமாதியது
தான்திறந்து வேகமுடன சரீரி வாக்குண்டாச்சு
தினகரன் தன்னொளிபோல
வடிவங்கண்டேன் திகழான சட்டமுனிதன்னைக்கண்டேன்
மனமுருகி யென்மீதில்
கிருபைவைத்து மாட்சியுடன் ஞானோபதேசஞ்சொன்னார்
அனல்கண்ட மெழுகதுபோல்
நெஞ்சந்தானும் அப்பனே மனமுருகி வழுந்திட்டேனே
விளக்கவுரை :
2275. வழுந்திட்ட போதையிலே
சட்டர்தாமும் வகையுடனே வாக்களித்தார் அடியேனுக்கு
தொழுதிட்ட பாலாநீ
சினந்தன்னில் தோற்றமுடன் தோற்றமுடன் குளிகையது வுலவாய்ப்பூண்டு
கழுகுடனே வல்லூறு
பறந்தாற்போல கருணைபெற வெந்தனிடம் காணவந்தீர்
தழுவியே சித்தரும்
மைகண்டுபேசி தாரணியிற் கல்லாக சபிப்பார்தானே
விளக்கவுரை :