2276. தானான சித்தருட வுளவுகாணீர்
தாரணியில் ரிஷிமுனிவர் மர்மங்கோடி
வேனாக நல்லவர்போல்
நேசிப்பார்கள் விருதாவாய் வாதுமிகப்பேசியல்லோ
கோனாகக் குருநிந்தை
கூறுவார்கள் குடிகெடுக்கும் சித்தருண்டு குவலயத்தில்
தேனான வமுர்தமது யீவாரப்பா
தெரியாமல் கருவழியாற் கொல்லுவாறே
விளக்கவுரை :
2277. கொல்லுவார் அவர்கள்பதி
செல்லவேண்டாம் கொடிமுடியுஞ் சித்தரப்பா கோடியுண்டு
வெல்லவே சமாதியிடந்
தானழைப்பார் விருதுமிகப் பேசியல்லோ சாபமீவார்
செல்லவே ஞானத்தின்
வழிகேட்பார்கள் சேறான முப்பூவின் மார்க்கங்கேட்பார்
புல்லவே நாதத்தின்
முறையுங்கேட்பார் புகழான வுறுக்கினத்தின் கிடங்கேட்பாரே
விளக்கவுரை :
[ads-post]
2278. கேட்கையிலே தூரநின்று
வார்த்தைகேளு கெடியான கும்பகத்திலிருந்துகொண்டு
நீட்டமுடன் வனாகதத்தை
மேலேநோக்கி நெடுந்தூரங் காணிறுத்தி வூணிப்பாரு
பூட்கமல லட்சுமியும்
பொருந்திநிற்பாள் புகழான விசுத்தியிலே ஏறிப்பாரு
தாட்கமலத் தாள்திறந்து
போகம்பார்த்துச் சதாகாலந் தரணியிலகுவாய்வாழே
விளக்கவுரை :
2279. வாழவென்றால் வெகுகோடி
காலம்வாழ்வாய் வாகான கற்பமது தெரிந்துகொண்டு
நீழவே காயசித்தி மாயசித்தி
நெடுங்காலந் தானிருந்து நிலைத்துவாழ
மாழவே போகநிலை யறியவேண்டும்
மகத்தான விசுத்திதனை சுழுத்தியிலேமாட்டி
சாழவே சடாஷரத்தை மேலேநோக்கு
சதானந்த கணபதியை பூசிப்பாயே
விளக்கவுரை :
2280. பூசிக்கணபதியுங்
கந்தன்தானும் புகழாக வாணியுடன் மனமுவந்து
நேசித்து வாலையுடன்
நிரூபிதன்னை நேர்மையுடன் கண்டறிந்து நிச்சயித்து
ஆசையுடன் பிர்மான
லாகிரிதன்னில் அப்பனே விசுத்தியிலிருந்துகொண்டு
காசையெனும் பொன்னாசை
தனைமறந்து காசினியில் சித்தனைப்போல் வாழலாமே
விளக்கவுரை :