2286. கேட்டேனே பிரம்மாவு
மனமுவந்து கிருபையுடன் எந்தனுக்கு வழியுஞ்சொன்னார்
நோட்டமுடன்
சீனபதிதேசத்தார்க்கு நுணுக்கமுள்ள வதீதமென்ற வித்தைதன்னை
தோட்டமுடன் வுளவுமுதலெல்லாஞ்
சொல்லி தேசத்தில் சித்துவென்ற மர்மந்தன்னை
காட்டியே விட்டதொரு
வண்மையெல்லாம் கண்டாரே யாமானால் சபிப்பார்காணே
விளக்கவுரை :
2287. காணவே லோகமெல்லாஞ்
சித்தாய்ப்போகும் கைலாசங்காணுவதும் சூட்சமாகும்
நாணவே நாதாக்கள் கைமறைப்பை
நாட்டமுடன் கொட்டிவிட்டாய் கோடாகோடி
மாணவே குளிகையது
பூண்டுகொண்டு மகத்தான தேசமெல்லாஞ் சுத்திவந்தீர்
வேணவே வினோதமென்ற
கருவியெல்லாம் வெட்டவெளி பாழாகிவீணாய்ப்போச்சே
விளக்கவுரை :
[ads-post]
2288. போச்சென்று விடுகாதே
புண்ணியாகேள் புகலுகிறேன் நாலாங்கால் வரைதானப்பா
மாச்சென்ற வியாசர்முனி
சமாதியுண்டு மகாகோடி ரிஷிகளெல்லாம் அங்கிருப்பார்
ஆச்சர்யமான தொருமகிமையுண்டு
அதுக்கப்பால் கிள்ளைவனந்தானுமுண்டு
பாச்சலென்ற தபகோடி
ரிஷிகளப்பா பாரவனந்தனிலிருப்பார் சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
2289. சொல்லவென்றால் நாவுமில்லை பாவுமில்லை சோதியுடல் மலைமீது தோற்றங்காணும்
வெல்லவே சோதிரிஷி
வியாசர்தானும் வினோதமுடனங்கிருப்பார் கொலுக்கூடந்தான்
புல்லவே சித்தர்களின்
கூட்டவர்க்கம் பூலோகமிடங்கொள்ளாததீதமெத்த
பல்லவே கொங்கணரின்
கூட்டத்தார்கள் பகரவேமுடியாது பண்பதாமே
விளக்கவுரை :
2290. பண்பான நாலுபக்கம்
கோட்டைவாசல் பளிங்குமண்டபங் களங்குண்டு
திண்பான தடாகங்கள்
குகைகளுண்டு திடமான குன்னுகளில் தவசிருப்பார்
பண்பான தபசியிடம்
யானும்சென்றேன் கருத்துடனே சித்தரெல்லாம் எனைக்கண்டார்கள்
வண்புடனே யடியேனும்
தாள்பணிந்து வணக்கமுடன் குருவணக்கமோதிட்டேனே
விளக்கவுரை :