2291. ஓகவே காலாங்கிதனை நினைத்தேன்
உத்தமனே யடியேனும் வார்த்தைசொன்னேன்
நீதமுடன் யானுரைத்த
மொழியுங்கேட்டு நித்திலங்கும் வியாசர்முனி யாரென்றாரே
வேதமுனி நவின்றியதோர்
மொழியைக் கேட்டு வேகமுடன் காலாங்கிசீஷனென்றேன்
போதமுடன் எந்தனுக்கு
வேதயாகும் புகட்டினார் வேதரிஷி புகலத்தானே
விளக்கவுரை :
2292. புகலவே வேதத்தின்
சூட்சாசூட்சம் புகழான வஷ்டகர்ம யாகமெல்லாம்
நிகலவே யோகத்தின்
மார்க்கந்தானும் நெடிதான குருபாரசேஷமந்திரம்
சகலவே சூக்குமத்தின்
சூட்சாசூட்சம் தசாங்கமுடன் மேலேறிநிற்கலாகும்
அகலவே பரவொளியைக்காணலாகும்
அப்பனே கேசரத்திலிருக்கலாமே
விளக்கவுரை :
[ads-post]
2293. இருக்கலாம் அஞ்சாங்கால்
வரைதானாகும் எழிலான கோத்தையது ருத்திரக்கோட்டை
பெருக்கமுடன்
கானாறுகுகைகளுண்டு பேறான சில்லாறு தீயாறுண்டு
சருக்கமெனும் நாதாக்கள்
சங்கமுண்டு சாயுச்சியப் பதவியென்றும் சொல்லலாகும்
குருக்கதனில் ரசச்கிணறு
கோடியுண்டு குருவான ஈசுரன்றன் விந்துவாமே
விளக்கவுரை :
2294. விந்தான ரசமதுதான் பொங்கிப்பொங்கிப்
விசையுடனே தீயாற்றில் பாயும்போது
தொந்தமுடன் கானாற்றினோரமப்பா
துறைமுகத்தில் சத்தியென்ற கெந்தியுண்டு
விந்துடனே சத்தியது
சேர்ந்துகொண்டு வீராதி தீயாற்றினக்கினியாலே
சந்தமுடனுறவாகி சிவப்புமாகி
சார்பாகச் செந்தூரம் ஜெனிக்குந்தானே
விளக்கவுரை :
2295. ஜெனித்ததொரு செந்தூரம்
சொல்லப்போமோ திறமான சித்தர்முனி ரிஷிகள்காவல்
பனித்தடங்கண் வேகமது
வதிகம்கொண்டு பாரிலே முப்பூவைப்போலேபூர்த்து
தனியாகக் காரமுடன் வீறுகண்டு
தாக்கான செம்பினுட கோட்டையெல்லாம்
வனிகனைப்போல்
பழுத்துமிசுவீறுகொண்டு வாகான தங்கமது போலேகாணும்
கனியான கோத்தையெல்லாம்
தங்கமாகும் கதிரோன்போல் பிரகாசம் காணும்பாரே
விளக்கவுரை :