2296. காணுமே நாதாக்கள்
சித்துதாமும் காட்டினார் மகிமைகள் மெத்தவுண்டு
தோணவே வரைக்குள்ளே
செல்லும்போது துறையான சமாதிமுகம் கண்டுசென்றேன்
வேணவே ருத்திரனார்
சமாதிபக்கம் விட்டார்கள் எந்தனையு முனிவர்தானும்
நாணவே யடியேனும்
காலாங்கிதம்மை நலமுடனே தாள்பணிந்து நவின்றிட்டேனே
விளக்கவுரை :
2297. நவின்றிட்டேன் ருத்திரர் சமாதிபக்கம் நயமுடனே தலைவாசல் நிற்கும்போது
துவின்றிட்ட சமாதியது
தாள்திறக்க துலங்கவே ருத்திரனார் குருவைக்கண்டேன்
புவின்றிட்ட திருமுகத்தை
பார்க்கும்போது பொலிவான ஜோதியொளி மின்னல்போலாம்
கவின்றிட்ட தேகமது
கூச்சலிட்டு கண்காணாஜோதிதன்னனில் சொக்கிப்போச்சே
விளக்கவுரை :
[ads-post]
2298. போகையிலே ருத்திரனும்
கண்டுஎன்னை பொற்புடனே மனதிறங்கி யெனையாரென்ன
சாகமுடன் காலாங்கி
சீஷனென்றேன் சட்டமுடன் சொல்கையில் ருத்திரர்தாமும்
பாகமுடன் எந்தனுக்கு
வரமுமீய்ந்தார் பட்சமுடன் வரம்பெற்று சித்தர்பக்கம்
சோகமுடன் நிற்கையில்
சித்தர்தாமும் சோதித்து மலைபோகச் சொன்னார்தாnஏ
விளக்கவுரை :
2299. சொன்னவுடன் அடியேனும்
குளிகைபூண்டு சோதித்து மலைமீதில் சென்றபோது
அன்னமெனும் பட்சியையான்
கண்டேனங்கே அன்புடனே வன்னமதுகண்டபோது
நன்னையா எந்தனுக்கு
வன்னந்தானும் நலமுடனே ருத்திரர் மகிமைதன்னை
பன்னயமாய் தாம்உரைத்து
பட்சமுடன் முதுகேற்றிப் போகலாச்சே
விளக்கவுரை :
2300. முதுகின்மேல்
எந்தனையுமேற்றிக்கொண்டு முனையான மலைமுகவில் கொண்டுசெல்ல
கதும்புடனே யானுமங்கே
இறங்கினேன்யான் கதிரவனார் தோற்றமது காணவில்லை
உதுப்மான விருள்மூடி
பனிகள்நிற்கும் வுயர்ந்தமலை சுற்றிலுமே சித்தரப்பா
ததும்பலுடன் நிற்கிறதைக்
கண்டேன்யானும் தாடகையாள் சமாதியது சொன்னார்தாமே
விளக்கவுரை :