2311. காணணென்றால் இன்னம்வெகு வதிசயங்கள் கண்டேனே கல்லென்ற வெள்ளைக்கல்லில்
மாணவே உள்ளிருக்கும்
ரவைதானப்பா மண்டலத்தில் கண்டதில்லை மாந்தரங்கே
தோணவே பிரகாசமான
ஜொதிசுடரொளிப்போல் வயிரங்கள் கூறப்போமோ
நீணவே நாதாக்கள்
காண்பதல்லால் நீணிலத்தில் காமிகட்கு கிட்டாதன்றே
விளக்கவுரை :
2312. அன்றான ஜடாயுவுட
வனத்தில்காணும் அதிகாயன் சமாதியது இருக்கக்கண்டேன்
தன்றான சமாதிமுன்னே
நின்றபோது தயவுள்ள வதிகாயன் வாக்குரைத்தார்
குன்றான மலைதேடி குகைகள்தேடி
குளிகைகொண்டு மலையேறி வந்ததென்ன
நன்றாக என்னையுந்தான்
கேட்டபோது நலமுடனே யானுரைத்த வண்மைகேளே
விளக்கவுரை :
[ads-post]
2313. கேட்டவுடன் அடியேனும்
கிருபையோடு கெவனமுடன் காலாங்கிநாதர்தம்மை
நீட்டமுடன் தான்நினைத்து
கூறலுற்றேன் நெடுந்தூரம் ருத்திரனார் காலனுக்கு
வாட்டமுடன்
அஷ்டகிரிகாணவென்று வாகுடனே மலையேறி வந்தேனென்ன
மாட்டிமையாய் ருத்திரனார்
யெந்தனுக்கு மகிழ்ச்சியுடன் உபதேசம் சொன்னார்தாமே
விளக்கவுரை :
2314. சொன்னவுடன் குளிகையது
பூண்டுகொண்டு சுற்றியே பார்த்துமங்கே இருந்தபோது
மன்னனா மரிச்சந்திரன்
பாட்டன்தானும் மகபதியான் கொலுக்கூட சமாதிதன்னை
பன்னவே பார்க்குகைக்கு
வருகிற்சென்றேன் பாராளுஞ்சமாதியிலே வாக்குண்டாச்சு
நன்னயமா எந்தனுக்கு
ஞானோபதேசம் நவின்றிட்டார் ராஜமன்னர் நவின்றிட்டாரே
விளக்கவுரை :
2315. நவிலவே வினோதமென்ற
வித்தைதானும் நாதாக்கள் செய்ததில்லை நாட்டிலேதான்
புவியுடனே காலாங்கி
நாதர்பாதம் புகழ்ச்சியுடன் தாள்வணங்கி சாற்றலுற்றேன்
பவிமதிசந்திரன் போல்
காரந்தன்னைப் பக்குவமாய்தான்பொரித்து முட்டைபோல்
குவியலுடன் தான்சீவி வளவதாக
கொற்றவனே முட்டைபோ லெடுத்துக்கொள்ளே
விளக்கவுரை :