86. சுருக்கான மஹேஸ்பரத்தின்
பதியைத்தாண்டி சூ என்றசதாசிவமிடத்தே காலையூன்றி
மகத்தான சிகாரத்தை
வைத்துப்பாரு மகத்தான சித்தோடும் கெனனமாகும்
செருக்கான மனோன்மணி
மாதாவின்பாதம் திரமானவாசிவைத்துப் படியேபார்க்க
பெருக்கான மெய்ஞான
நிராதாரந்தான் செய்வான வாசினைதான் தானும்நீயாமே
விளக்கவுரை :
87. நீயான குருபதத்தில் நின்றாயானால் நிலையான சிவயோகவாசிஓட்டு
தாயான பூரணமும்
சகலதெரிசனமாஞ் சதமான வகரசிகாரத்தின் மார்க்கம்
வயலான வலுவைத்தான்
வைத்துமங்கே மதியோடேபார் மகத்தானசித்தி
தீயான நீக்கவிட மற்றுநின்ற
சிறந்திடுமே பூரணந்தான் சித்துமாதே
விளக்கவுரை :
[ads-post]
88. சித்தாகப் பாய்ந்தேன்நான்
அண்டந்தன்னில் தெளிவான அண்டத்தின் சித்தஞ்சொன்னார் நந்தி
அத்தாக அண்டியஞ்சலித்து
அடுக்காக அதுதாண்டி யிருந்ததுதான் நடுவுமாகி
பத்தாக துனையென்றார்
பட்டார்தாமும் பாலித்தார் ரூபத்தை வாறவைத்து
கத்தாக மலினியை
காத்தில்கட்டி கனல்ஜோதி யண்டம்போல் நுழைந்திட்டேனே
விளக்கவுரை :
89. நுழைந்திட்டே நிருவிகற்ப
நிறையானயோகி நேரஞ்சு தனித்தனியே கோடிசித்தர்
குழைத்திட்டு தெவிட்டாதே
பார்த்துநின்றேன் சித்தாணியுனக் கெந்நாளாச்ச தென்றார்
குழைந்திட்டு கொடியறுத்து
மாச்சுதென்றேன் நுறியதளஞ்சித்திப் பாரென்றார்கள்
மழைத்திட்டு நுழைந்தேன்
பின்னோரண்டத்தில் மகத்தான சித்தர்க்கு கைகூப்பினேனே
விளக்கவுரை :
90. கைகூப்பி கட்டியதோர்
பதுமைபோலக் கையினால் தடவினேன் கைதட்டாது
கைகூப்பி நீள்சாரடைந்தயோர்
களரியோரைக் கண்டுநானஞ்சி வலம்வந்தேன்
கைகூப்பி பரிவான அடுக்கொன்று
தன்னில் பாய்ந்தேநான் முடியேறிபரிந்துபோந்தேன்
செய்கூப்பி அண்டமெல்லாம்
சோதித்தேநான் சுருக்காக மறுவண்டம் பாய்ந்திட்டேனே
விளக்கவுரை :