81. பானான நூல்சொன்னபடி கேட்கும்
பரந்தோடும் வாசியொடு பழகினாக்கால்
வானான வார்த்தையால்
பார்த்திட்டாக்கால் வளமாக காயத்திரி யோகித்தாய் தானும்
கானான காய்க்குமே
தேங்காய்தானும் கனமான யோகசித்தி பார்க்குங்காலம்
கோனான பறத்தினுட முலவைப்பாரு
குடியிருந்த வாசியுடமுறையைக்கேளே
விளக்கவுரை :
82. கேளுநீ மூலத்தில்
குமட்டுவாகரத்தை கீழமர்த்தி சிகாரத்தை போகாமல்ரேசி
நீளுநீ ரேசித்துப்
பூரித்துப்பாரு நிர்மலமாம் குண்டலியில் நந்திதானும்
வாளுநீ நந்திவந்து
வசனிப்பார்பார் மகத்தான சித்தியெட்டு ஞானந்தானும்
நாளுநீ வாசிவைத்து
மந்திரமகாரத்தை நலமாக கண்டிட்டே நாட்டிடாயே
விளக்கவுரை :
[ads-post]
83. நாட்டிட்ட மூலத்தைத்
தாண்டிப்பின்னர் நலமான கஞ்சனுபதியிற்கூட்டி
ஒட்டியே வகாரத்தை
உருத்திநோக்கி ஒளியான சிகாரத்தால் உள்ரேசிக்க
பாட்டியே பண்டான
பிறவியறலாகும் பண்பாக நான்முகனைக் கண்டதாலே
மாட்டியே கஞ்சனுட
பதியைத்தாண்டி மாவிருக்கும் மதியூடி மருவிநில்லே
விளக்கவுரை :
84. மருவியே வகாரத்தை யுட்பூரித்து
வாதமாஞ்சிகாரத்தை உள்ளே ரேசி
பருவியே பஞ்சநரை
யெல்லாம்போக்கிப் பாலனுமாய் பதினாறுவயசுமாவார்
உருவியே யாங்கடந்து
ருத்திரன்தன்பதியில் உணர்வான வாசியைநீ உருத்தித்தாக்கு
தருவியே சிகாரத்தை
உள்ரேசிக்கச் சடந்தானும் சிவப்போடி சித்தியாமே
விளக்கவுரை :
85. சித்தியாம் ருத்திரன்தன்
பதியைத்தாண்டி தெளிவான மஹேஸனுட பதியில்புக்கி
அத்தியாம் வகாரத்தை
அசையாமல்பூரி யதுக்குள்ளே சிகாரத்தை உள்ரேசிக்கப்
பத்தியாம் சிறுபிள்ளை
தானாவார்கள் பாருடலுங்கை நெல்லிக்கனிபோலாகும்
துத்தியாம் சிவயோகம்
வைத்துப்பாரு துடியாகும் குளிகையெல்லாம் சுருக்கிலாமே
விளக்கவுரை :