96. திடமான நூல்தன்னில்
செப்பினது சொல்லாய் தியங்காத சாரனைதான் கட்டுமார்க்கம்
குடமான கோடரியொடு
சிராவனந்தான் கொடிதான பரிக்குருவும் செந்தூரங்கள்
தடமான லவனமொடு சத்தும்செம்பு
தனியகந்த குளிகையொடு செந்நீராகும்
கடமான திருகலமும் இனக்கூட்டந்தான்
கடிதானமூலிமகா அவுஷதந்தானே
விளக்கவுரை :
97. அவுஷதமொடு வவுஷதவகை
பதினேழும் அடங்களுஞ் சொல்லு ரெண்ணாயிரத்துள்ளே
வவுஷதமொடு ஏழுலட்சகிரந்தப்
போக்கை இடித்தும் எண்ணாயிரமாம் என்பாட்டர்சொன்னார்
கவுஷதமெண்ணாயிரத்தைத்
திரட்டித்தானும் கதித்த ஐயாயிரமாய் பின்புசொன்னார்
மவயஷத மூவாயிரமும்
ஆயிரம்பின்பு சொன்னார்முந்நூறு முப்பத்து மூன்றென்றாரே
விளக்கவுரை :
[ads-post]
98. என்றாரே சாற்றினதோர்
நூலேழில்தான் ஏழுலட்சம் கிரந்தத்தின் போக்கெல்லாந்தான்
கன்றாரே கரும்பான பாகுபோல்
திரட்டி கருவெல்லாங் கண்டுணர்ந்த படியேசொன்னார்
தன்றாரே தந்தை காலாங்கிநாதர்
தாமுமோசகல நூல்பார்த்துத் தேர்ந்து
அண்டாரே யகண்டம்போலஞ்சு
காண்டஞ்சொன்னார் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் அலாவினேனே
விளக்கவுரை :
99. அலாவினேன் நூற்றறுபதா
மண்டலத்தில் ஐயர்நந்தி சாஸ்திரமும் ஆராய்ந்துபார்த்தேன்
துளாவினேன் பாட்டருடனென்நூலை
ஐயர்துதி செய்தேன்சுருதியாம்வாக்கியத்தை
கலாவினேன் காலாங்கி
நூலைதானும் கருத்திருத்திச் சனகாதி நால்வர்நூலும்
விளாவினேன் ரிஷிசித்தர்
நூலையெல்லாம் வெட்டவெளியாய் திறந்துவீசினேனே
விளக்கவுரை :
100. வீசினேன் ஏழுகாண்ட
முடுக்காய் சொன்னேன் வெட்டவெளி யாகுதற்கு நிகண்டு சொன்னேன்
தூசினேன் சூத்திரந்தான்
எழுநூற்று சொச்சஞ் சொல்லரிய நிகண்டதுவும் பதினேழுநூறு
பூசினேன் யோகத்துக்கு
உறுதிசொன்னேன் பூட்டுகின்ற லட்சியத்தின் போக்குஞ்சொன்னேன்
ஓதினேன் மந்திரத்தின் உறுதிசொன்னேன்
உறுதியாம் வாசியென்ற யோகந்தானே
விளக்கவுரை :