1291. பதியான
மேருகிரிதன்னிற்சென்றேன் படியான சிகரவரை யானுங்கண்டேன்
நதியான தனையொன்று
வங்கேகண்டேன் நாதாக்களிருப்பிமுந் துறையுங்கண்டேன்
பொதியான புத்தொன்று
வங்கேயுண்டு புகழான சித்தொருவ ரதிலேகண்டேன்
துதியான மனதாரஞ்செய்துகொண்டு
தொழுதுமே யவர்பாதம் பணிந்திட்டேனே
விளக்கவுரை :
1292. பணிந்திட்டேன் சித்தரையான்
வணங்கிமெத்தப் பரிவாகநின்றுகொண்டு பாண்மைகேட்டேன்
துணிந்திட்டு யவரிமும் பத்திவைத்து
தொண்டனாய்க் கீழிருந்து துதித்துநின்றேன்
கனிந்திட்டு என்பேரில்
கிருபைகூர்ந்து கடாட்டிக்க யெந்தனைநீ யெவர்தானென்றார்
வணிந்திட்டு யென்பேர்
போகரென்றேன் வந்தவரலாறென்னசொல்லென்றாரே
விளக்கவுரை :
[ads-post]
1293. சொல்லவே சீனபதிநடந்துயானும்
துப்புரவாய் குளிகையது பூண்டுகொண்டு
மெல்லவே மேருகிரி
பார்க்கவென்று மேன்மையாய்த் தங்களிடஞ் சேர்வைகண்டேன்
புல்லவே யவரெனக்கு
வாக்களித்தார் பூதலத்தில் மனிதரப்பா வந்தாயென்றார்
அல்லவே நானுமுன்னை
சபிப்பேனென்றார் அப்பனே மனமொருத்தேனென்றிட்டாரே
விளக்கவுரை :
1294. என்றைமே பாலனுமே ஏங்கிநிற்க
என்பேரில் மறுபடியுங்கிருபைவைத்து
குன்றுமேல்
வந்ததுனக்கதிககுற்றம் கொடிதான தண்டனைகள் செய்யவேண்டும்
ஒன்றுமே யாமுனக்கு
செய்யாமற்றான் வுத்தமனே வுபதேசஞ்செய்வேனென்றார்
கன்றுடனே தாய்சேர்ந்தக்
கதையைப்போலக் காத்திருந்தேன் வெகுநாளாயானுந்தானே
விளக்கவுரை :
1295. காத்திருந்த யெந்தனுக்குக்
கடாட்சம்வைத்து கைலாச மேருகிரிவந்த பாலா
பார்த்திருந்து துவாபரமாய்
யுகத்தில் யானும் பர்வதாமாமேருகிரி தன்னில்வந்தேன்
சேர்ந்திருந்த வதிசயங்கள்
மெத்தவுண்டு செப்பினாரெந்தனுக்கு வெளிதாக
போர்த்திருந்த
புலிதோலினாசனத்தை பொங்கமுட னெனக்களித்தார் புதுமைபாரே
விளக்கவுரை :

