போகர் சப்தகாண்டம் 1296 - 1300 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1296 - 1300 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1296. புதுமையுடன் கனியொன்று யெனக்களித்தார் பொங்கமுடன் பசியாறி வீற்றிருந்தேன்
பதுமைதனை யவரிடத்தில் கண்டேன்யானும் பட்சமுட னதுவருகில் நின்றிருந்தேன்
பதுமையுட னென்னிடத்தில் மிகவும்பேசி கருவான மறைப்பையெல்லாம் பிரித்துக்காட்டி
பதுமையுட னுபதேசஞ்செய்துயென்னை மோட்சவழிக்கேகும்வழி சொல்லலாச்சு

விளக்கவுரை :


1297. ஆச்சப்பா பிரதமையின் மகிமைதானும் அதற்கப்பால் மேருவின் வடபாகத்தில்
பேச்சப்பா யில்லையது பதுமையப்பா பேரான பதுமையொன்று யங்கேகண்டேன்
மூச்சப்பா சுவாசனையால் வயிறென்றெண்ணி முன்னிருந்த பதுமைபோலிருக்குதென்று
விச்சப்பா வதனிடத்தில் நின்றேயானும் வேடிக்கை வினோதமெல்லாஞ் சொல்லலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

1298. சொல்லுவது வப்பதுமை புதுமைமார்க்கம் சுந்தரனேயாரென்று யெனைதான்கேட்க
மெல்லவே யான்பயந்து நடுநடுங்கி மெத்தவுபசாரமுடன் வணங்கியானும்
வெல்லவே காலாங்கி நாதர்பாதம் விருப்பமுடன்தான்தொழுது யெடுத்துரைத்தேன்
புல்லவே யென்பேரு போகநாதன் புகழ்ச்சியுடன் குளிகையிட்டு வந்திட்டேனே

விளக்கவுரை :


1299. வந்திட்டேன் சீனபதியான்கடந்து வாகுடனே மேருகிரி காணவந்தேன்
குந்திட்ட சித்தருட புத்துகண்டேன் கோடித்து அவர்பாதம் பணிந்துநின்றேன்
திந்திட்ட பதுமையொன்று முன்னே கண்டேன் மொழிந்திட்ட வனேகவித வதிசயங்கள்
தந்திட்ட தெந்தனுக்கு மனேகவண்மை தயவுடனே கொடுத்ததென்று மொழிந்திட்டேனே

விளக்கவுரை :


1300. மொழிந்திட்ட வார்த்தைதனைக் கேட்டபோது முனையான பதுமையது யென்னைப்பார்த்து
சுழிந்திட்ட வனேகவித வித்தையெல்லாஞ் சூட்சமுடனெ ந்தனுக்குச் சொல்லலாச்சு
பருந்திட்ட நானுமல்லா வெகுவாப்பேசி பாங்கான வுயிர்கொடுக்கு மூலிகேட்டேன்
வழிந்திட்டு யெந்தனுக்கு சொன்னதென்றால் வையமெல்லாம் சித்தாகப் போகுந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar