போகர் சப்தகாண்டம் 1286 - 1290 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1286 - 1290 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1286. ஏறலாந் தேவதாகோபுரத்தில் யெழிலான குடைதனையே கையிலேந்தி
தேறலாஞ் சிகரபுரை மீதிருந்து தேற்றமுடன் குடைதனையே விரித்துயேந்தி
மாறலாமேலிருந்து கீழ்குதிக்கில் மதிப்புடனே தீரனாயிருந்துகொண்டு
கூறலாமிக பழக்க மதிகமாகி குன்றின் மேலேறுதற்கு குணமுண்டாமே

விளக்கவுரை :


1287. குணமுண்டா மடமனமுண்டாங் குவலயத்தில் கோடிபேருளைவந்து மனங்களிப்பார்
பணமென்ன கோடிதனம்படைத்தாலென்ன பாருலகிலிவ்வித்தைப் பகரப்போமோ
சின்மதிலே யானுமிந்தவித்தை தன்னைச்சீனபதிசென்று செய்துகீர்த்திபெற்றேன்
வளமுடனே மானிடர்கள் பிழைக்கவென்று வாகுடனே பாடிவைத்தேன் வளமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

1288. பாடினதோர் வண்மையினால் சித்தரெல்லாம் பாருலகிலென்மீது கோபங்கொண்டார்
தேடினதோர் நாதாக்கள தீதவித்தை தெருவினிலே வீணாகப்போச்சுதென்று
கூடியே யெல்லோரு மொன்றாய்க்கூடி கூறினார் சாபமதுயென்னசொல்வேன்
நாடியே காலாங்கிநாதர் பாதம்தான்வணங்கி சாபமதை தவிர்த்திட்டேனே

விளக்கவுரை :


1289. தவிர்திட்டேன் மறுபடியஞ்சித்தர்கூடி தயவுடனே யெனையழைத்து தர்க்கம்பேசி
மவிர்த்திட்ட ஜாலமது மிஞ்சிப்போச்சு மகத்தான வித்தையது பாழாய்ப்போச்சு
உயிர்த்துவிட்ட வித்தையது சொல்லப்பாவுத்தமனே செத்தவரைப் பிழைக்கும்வித்தை
நிவர்த்தி கட்டுமற்றதெல்லாம் செய்யவென்று நீணிலத்தில் நாதாக்கள் தடுத்திட்டார்

விளக்கவுரை :


1290. தடுத்திட்ட மொழிபடியே யான்வணங்கி தட்டாமலவர்பாதம் பணிந்துமேதான்
அடுத்திட்ட நிர்வாணி பாதஞ்சென்று அப்பனே நெடுந்தவசு தானிருந்து
கொடுத்திட்ட வித்தையெல்லாங் குவலயத்தில் கொட்டினேன் மானிடர்கள் பிழைக்கவென்று
எடுத்திட்டு குளிகைதனைக் கொண்டுயானும் ஏகினேன் சீனபதியமர்ந்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar