1306. என்றேனே பதுமைக்கு
விடையுஞ்சொன்னேன் என்மீது பதுமையது கிருபைவைத்து
குன்றான பொருளெல்லா
மெனக்கோதித்து குவலயத்தில் போகவென்று வாக்களிக்க
பன்றான சிகரவரைக் காணவென்று
பாங்குடனே மறுபடிய மேலேவந்தேன்
ஒன்றான பதுமையது
பின்னுங்கண்டேன் ஓகோகோநீயாரென் றோதலாச்சே
விளக்கவுரை :
1307. ஓதவே யான்வணங்கி
ஒடுங்கிநின்று ஒப்பமுடன் தான்பணிந்து தொழுதுநின்றேன்
நீதமுடனெந்தனுக்கு
வுபதேசங்கள் நிட்களமாம் பூரணத்தை யோதிற்றங்கே
போகரிஷியங்கிருந்து வாழ்த்து
சொன்னார் பூதலத்தில் போய்பிழைக்க வயனஞ்சொன்னார்
தோதமுடன் நானனைத்தும்
கேட்டுமேதான் தோற்றமுடன் தங்களிடம் கண்டேன்தானே
விளக்கவுரை :
[ads-post]
1308. கண்டுமே தானுரைத்தே
னதீதமார்க்கம் கைலாசநாதரங்கே கிருபைகூர்ந்து
அண்டமுடன் மேருகிரி
தன்னில்வாழும் அழகான மயில்மீதி லிருந்துகொண்டு
தொண்டனெனக் கதிகமுட
னுபதேசங்கள் சுருக்கமுன்றானுரைத்தார் ஞானம்நூறு
விண்டுமே மேல்வரையிற்
சிகாரம்போனேன் மிக்கான கணபதியைக் கண்டிட்டேனே
விளக்கவுரை :
1309. இட்டேனே கணபதியை யானுங்கண்டேன் இயலான மேருகிரி தன்னில்வாழும்
அட்சான பெருச்சாளி வாகனத்தி
லன்புடனே வினாயகரும் வீற்றிருந்தார்
கிட்டான தேவருட
னனேகம்பேர்கள் கிருபையுடனங்கிருந்தார் சேர்வைகண்டேன்
சட்டான தோத்திரமு
மறுநூறுசொன்னார் சர்ங்கமுட னுபதேசம் பெற்றேன்பாரே
விளக்கவுரை :
1310. பாரேதான் மேருகிரி
பக்கம்போனேன் பாங்கான சுனையுண்டு குகைதானுண்டு
சீரேதான் சித்தரவர்
நூறுபேர்கள் சிறப்பாக வங்கிருப்பார் தவயோகத்தில்
நேரேதா னவர்கள்முகந்தன்னில்
நின்றேன் நிஷ்கரமா யெந்தனையும் நிமிர்ந்துபார்த்தார்
சேரேதா னிவ்விடத்தில்
வந்ததென்ன சிறியதோர் பாலகனே சொல்லென்றாரே
விளக்கவுரை :

