1311. சொல்லென்றார் சித்தரெல்லா
மொன்றாய்கூடி சூழ்ந்துகொண்டா ரெந்தனையங் கிட்டேவந்து
கல்லென்ற கல்லோடே யான்பயந்து
கர்த்தாவாங் காலாங்கி நாயர்தம்மை
புல்லனான் சிறியனும்
யாநினைத்து புத்தியுடன் தைரியங்கள் மிகவுண்டாகி
வெல்லவே சித்தர்களை
யடிபணிந்து விருப்பமுனென்பேரு போகரென்றேன்
விளக்கவுரை :
1312. போகர்நான் குளிகையிட்டு
சீனம்விட்டுப் பொங்கமுடன் மேருகிரிதன்னைக்காண
வேகமுட னாலுவரையேறிவந்தேன்
வேதாந்த மாயதனையே காணவில்லை
வூகமுடன் வடிவேலர்
தன்னைக்கண்டேன் யுற்றதொரு பதுமைமுகம் சேர்வைகண்டேன்
சாகமுன் சித்தருட
தெத்துகண்டேன் சண்முகத்தின் சூலமுதல் மயில்கண்டேனே
விளக்கவுரை :
[ads-post]
1313. மயில்கண்டேன் சுப்பிரமணியர்
தன்னைகண்டேன் வாகான பதுமையொன்று வங்கேகண்டேன்
ஒயிலுடனே
பதுமையுபதேசங்கேட்டேன் ஓங்காரச் சத்தமது காதிற்கேட்டேன்
வெயிலுடனே பனிமுந்
திசைகள்மாறி வெட்டடெளி சின்மயத்தின் ஜோதிகண்டேன்
குயிலுடைய சத்தமது பதுமைகூற
கொற்றவரே தமதிடத்தில் வந்திட்டேனே
விளக்கவுரை :
1314. வந்திட்டே னென்றதுமே
வார்த்தைசொன்னேன் வாராக எந்தனுக்கு கிருபைகூர்ந்தார்
முந்திட்ட சாபமதை
நிவர்த்திசெய்து மொழிந்திட்டார் மாநிலத்தில் போகவென்றார்
பிந்திட்டு அடியேனும்
சித்தர்முன்னே பேசினேன் வெகுவாக வாதுசெய்தேன்
தந்திட்டா ரெந்தனுக்கு
சாத்திரங்கள் சதகோடிவித்தைகளை யறிந்திட்டேனே
விளக்கவுரை :
1315. அறிந்தேனே மேருவுக்குத்
தென்பாகத்தில் அஷ்டவிதசித்தர்கள் தானங்கிருந்தார்
பறிந்திட்டு யவர்களைநான்
தெரிசித்தேதான் பாங்குடனே யவரிடமும் வணங்கிநின்றேன்
சறிந்திட்ட சாத்திரங்கள்
மிகவுஞ்சொன்னார் சரிகைகிரியோகமுதல் யாவுஞ்சொன்னார்
குறிந்திட்ட வஷ்டாங்க
யோகஞ்சொல்லி கொற்றவாநீ யாரென்றெனைக்கேட்டாரே
விளக்கவுரை :

