1321. செய்திட்ட பிற்பாடு
சிறியேன்தானும் சிறப்புடனே மேருவுக்கு குணபாகத்தில்
செய்திட்ட ரிஷிகோடிசித்தரப்பா
மெய்மறந்து தவநிலையில் நிற்கக்கண்டேன்
பொய்த்திட்ட
மில்லாதசித்தர்தம்மை பூதலத்தில் காண்பதுவுமறிதேயாகும்
வைதிட்டால் குற்றமில்லை
யென்றுசொல்லி வாகுடனே யவரருகில் நின்றேன்பாரே
விளக்கவுரை :
1322. பார்க்கையிலே சித்தர்முனி
ரிஷிகள்தாமும் பாகுடனே யெந்தனையாரென்றுகேட்டார்
மேற்கையிலே யிருந்ததொரு
சித்தர்தம்மை மேன்மையுடன் றாள்பணிந்து வணக்கஞ்சொன்னேன்
கார்க்கவே வேண்டுமென்று
காலாங்கிதம்மை கருத்திலே தானினைத்து குளிகைபூண்டு
தீர்க்கமுட னென்பேரு
போகரென்றேன் திறமையுடன் சித்தர்களு மருள்செய்தாரே
விளக்கவுரை :
[ads-post]
1323. அரஉள்செய்தா ரெந்தனையு
மழைத்துச்சென்று அனேகவித தருமான வுளவுஞ்சொல்லி
பொருளிந்த குகைமுதலு
மருமங்காட்டி போக்கான வழிதுறையு மிகவுரைத்து
இருள்சேர்ந்த பாறையது
தன்னிற்சென்று யெழிலான பச்சைமலை தன்னைக்காட்டி
இருள்சேர்ந்த பொன்வளையுந்
தலமுங்காட்டி மூதண்டமான ரசக்கிணற்சொன்னாரே
விளக்கவுரை :
1324. சொன்னாரே காஞ்சான
மாமலையுங்காட்டி துரைகோடி ரவிவிளையுமிடமுங்காட்டி
மின்னேதான் கெம்பினுட
விளைவுஞ்சொன்னார் மேலான சிகரவரைமுனையுங்காட்டி
அன்னேதா னருமையுடன்
சுனையுங்காட்டி அப்பனே கருமீலிவிளைவுங்காட்டி
பொன்னேதான் விளைகின்ற வாறுங்காட்டிப்
பூதலத்தில் போகவென்ன விடைதந்தாரே
விளக்கவுரை :
1325. விடைதந்தார் மேருகிரி மேலேசென்றேன் மிக்கான சித்திரக்கூடந் தன்னைக்கண்டேன்
தடைமுகமாந் தடாகமதில்
புஷ்பங்கண்டேன் தாக்கான கருஞ்செந்தாமரையுங் கண்டேன்
படைமுகமாம் ராட்சதாள்
கூட்டமுண்டு படியோரம் யாராலும்கிட்டவொண்ணா
சடைமரமாஞ் சவ்வாது
மரமுங்கண்டேன் சந்தனமாம் விருட்சமுடன் மரங்கண்டேனே
விளக்கவுரை :

