போகர் சப்தகாண்டம் 31 - 35 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 31 - 35 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
31. கட்டியே அஞ்சலிபண்ணி குண்டலியாந்தாயை மனதில்வைத்து கணபதிவல்லபைத்தானும்
மூட்டியே முகிழ்ந்திரந்து வழிதாவென்று முனையானசத்தியென்பாய் மயக்கந்தீர
தெட்டியே வஸ்துவைத்தான் பாணம்பண்ணி செயலறிந்து கபாடமதுதிறப்பாரப்பா
எட்டியே நந்திபதமிறைஞ்சி போற்று ஏற்றமாந்தொழிலெல்லாம் எளிதிலாமே

விளக்கவுரை :


32. எளிதிலே நந்திவந்து இரக்கமாகி எட்டாமறுபத்துநாலுமீவார்
நெறியிலே வாதங்கைகட்டிநிற்கும் நீச்சான குருவகைகள் நிஜமாய்தோன்றும்
களியிலே காயமதுசித்தியாகும் கருத்தூனித்தான் வாய்க்கக்கலந்துபோவாய்
அளிகிலே ஆலமுண்டான் ஆட்டுக்காணும் மாச்சரியம் சிலம்பொலியும் மயக்குமாமே

விளக்கவுரை :

[ads-post]

33. அயிக்கமாய் விழுகாதே காமத்தீயில் அனுதினமும் வேதாந்தமுடிவைப்பாரு
ஒயிக்கமாய் ஒருவருடன் வாயாடாதே உண்மையாயிருந்து உன்னில் உண்ணிப்பாரு
தியக்கமாய் பொய்கொலைகள் செய்திடாதே சேர்த்தேறு வாசியென்ற தேசிதன்னில்
மயக்கமாய் வஸ்துவைநீ பாணம்பண்ணி மத்தாலேயழியாதே மாய்கைநீக்கே

விளக்கவுரை :


34. நீக்கியே ஐம்புலனை அருத்துசாடு நித்திரையைத் தள்ளிவிட்டு காலைப்பண்ணு
தூத்தமரே சகபூதந்தானும் சுயம்பான கும்பகமும் கணக்காய்சூட்டு
தாக்கியே அமுர்தவெல்லந்தன்னையுண்ணு சங்கற்பவிகற்பமென்ற சட்டைநீக்கு
வாக்கியே பிராணயம் வரிசைதன்னை மறவாமல் மாட்டுதற்கு மார்க்கஞ்செய்யே

விளக்கவுரை :


35. செய்துமே யுற்றுப்பார் கருத்தையூனித் திகையாதே புலன்களோடு கணேசன் காண்பார்
கொய்த்துமே பூசைபண்ணி குட்டிக்கொண்டு கூர்ந்துமே வாசிதன்னை இருத்திவைத்து
ஒய்த்துமே ஓம்சிறியும் கிறியுங்கிளியும் உயரயெங்கணபதி யென்றுச்சரிக்க
நய்ந்துமே நந்தியர்கொடிக்கதிர் கொப்பு நற்சுழியில் ஒளிகண்டால் நமநாடானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar