போகர் சப்தகாண்டம் 26 - 30 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 26 - 30 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
26. இருப்பான மூலத்தில் கணேசன்பாதம் இருத்தியே வாசியைநீ அதற்குள்மாட்டு
தடுப்பான பிராணயந்தான் தவறிற்றானால் தம்பித்து வரவழைத்து தளத்தில்சேரு
குறிப்பான மாத்திரைதான் ஏற ஏறக் குறிகளெல்லாம் குறிப்பாக வடிவம்தோன்றும்
மதிப்பான வாசியது வழுவிற்றானால் மனிதரெல்லாம் மாடென்ற வார்த்தைதாமே

விளக்கவுரை :


27. வார்த்தையால் தாக்கத்தால் ஒன்றுமில்லை வல்லமையால் ஐம்புலனை அடுத்துக்கட்டி
ஆர்த்தையால் அக்கரத்தை விழிரெண்டில்வைத்து அறிவான மனந்தன்னை அதற்குள்மாட்டி
தேர்த்தையால் தேசியென்ற குதிரைதன்னை சிக்கெனவாய் சிங்கென்று கடிவாளம்பூட்டி
மூர்த்தையால் மூலத்தில் மறிந்துகட்டி முனையான சுழினைவிட்டு மூட்டில்பாரே

விளக்கவுரை :

[ads-post]

28. மூட்டியே அதுவுண்ணும் கற்பமுண்ணும் மூதண்டை காயத்தைசுத்தி பண்ணும்
காட்டியே கனமான மூலிகையுமுண்ணும் கசடகற்றும் கழுகனத்தில் கண்ணொளிதான்மீறும்
ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைதள்ளி அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம்நீக்கும்
வாட்டியே ஐம்புலனை வாளால்வீசு மறவாதே இரவுபகல் வாசிவாட்டே

விளக்கவுரை :


29. மாட்டவே மார்க்கமாய் மூலத்தில் நில்லு மறவாதேயொன்றில் நின்றுதேறினாக்கால்
ஆட்டவே அடிமரத்தைதொத்தியேற ஆச்சர்யம் நுனிமட்டும் ஏறலாகும்
மூட்டவே மூலமதுபழகினாக்கால் முகிந்தவிடமாறுகடந்தப்பால் தாண்டி
தூண்டவே துவாதசாந்தத்தில் சொக்கிச் சுருதிமுடிந்திடமறிந்து சேரலாமே

விளக்கவுரை :


30. சேரவே சகஸ்திரமா முண்டகத்தின் பூவைச்சேர்ந்தேறிச் சந்திரமண்டலத்தில் புக்கு
ஆரவே அறிவென்ற மனதால்கொய்து ஆனைமுகன் வல்லபைக்குங் குண்டலியாந்தாய்க்கும்
பாரவே பதத்தில்வைத்து அர்சித்துத்தூபம் பலதூபம்பணிமாரி விவேகத்தாலே
தூரவே சோமப்பாலுகந்தளித்து தூயநால்மூலத்தில் குதிரைமுனைகட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar