46. உண்ணியே சரஸ்பதியை
தியானித்தூதி உறுதியாய் பெறுதற்கு உண்மைகேளு
கண்ணியே சகலவித்தை
தருந்தாய்நீயே தயாநிதியே சிங்குவையில் தரிக்குந்தாயே
முன்னியே நீபிரிந்தால்
மோடனாவான் முனிந்துநீ முன்னின்றால் மூத்தனாவான்
கன்னியே போகசித்தி வாதசித்தி
காயசித்தி ஞானசித்தி கடாட்சியெண்ணே
விளக்கவுரை :
47. என்றுமே தியானித்து
வாசிவைத்து யிழுத்துமேகம்மென்று இருத்திக்கும்பி
என்றுமே சகாரத்தால்
வியந்தோர்கோடி நல்வினைக்கும் தீவினைக்கும் எருத்தகடா
என்றுமே தியானித்து
இருக்கநன்று ஏத்தமலர்கொண்டு அர்ச்சித்தேற்ற
அகன்றுமே நான்முகன்
தன்பதியைவிட்டு அடியதிந்த மாலினுட பதியிரைக்கே
விளக்கவுரை :
[ads-post]
48. மாலினுட வீடதுதான்
அருவிரலின்மேலே மாசற்றபிறைபோல கோட்டையாகும்
மாலினுட விலையம்போல்
பத்திதழ்தான் பத்தில் மகத்தான லட்சத்தின் பயனைக்கேளு
தாலினுட ஜனகமகா
முனியின்தாயார் தயங்காதநரபர்ப்பர் தன்மையாகும்
ஆயினுடமங்கண்டு வில்பூதமப்பு
அதன்பீசம் வங்கென்றறியலாமே
விளக்கவுரை :
மணிபூரகம்
49. அறிந்தமணி
பூரத்தின்வீடுமாகும் அப்பனே துரியமதுயிருப்பிடந்தான்
பிரிந்தேசா வேதமுமாம்
படிகவர்ணம் பிரியாமல் லட்சுமிதான் வாம்பாகம்
கறிந்தஅறு சுவையுமங்கே
காணலாகும் கதிர்த்தநீர் மச்சையொடு உதிரமூளை
வெறித்ததோர் விந்துவொடு
அஞ்சமாகும் மிக்கசங்குசக்கரமும் கருடவாகனமே
விளக்கவுரை :
50. வாகனமாய் லட்சுமியின்
சமேதர்பக்கம் வாசியொடு மங்கென்று இருத்திக்கும்பி
ஆகனமாயரிநமோ நாராயணாவென்று
அனுசரித்து செபம்செய்து அஞ்சல்பண்ணு
தேகனமாய் ஜெகமெல்லாம்
ரட்சிக்கும்தாய்தான் திரோதமையுமயக்கத்தில் சுழற்றுமேதான்
மோகனமாய் மோகமெல்லா மானவீடு
மூச்சிரைச்சி குடியிருந்த முதிர்ந்தவீடே
விளக்கவுரை :