போகர் சப்தகாண்டம் 51 - 55 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 51 - 55 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
51. வீடாகதிரோதகையு மிருந்தவீடு வெகுபோகங்காமியத்தைவிடுத்தவீடே
வாசாமனங்கலங்கி நின்றவீடு மாயமெல்லாங்குடிகொண்ட மகத்தாம்வீடு
பேடாக்கருத்தழிந்து பெண்ணைத்தேடி பேய்க்கூத்தாய் நின்றலைந்த பெரியவீடு
சாகாவரம் பழித்த சாதிவீடு தன்வசமாய் வாசிகொண்டு தாக்கிடாயே

விளக்கவுரை :


52. தாக்கியே சந்திரமண்டலத்தில் பூவை சகஸ்திரமாமிதழாலே தரிக்கப்பண்ணி
பாக்கியே பலபலதூபந்தானும் பண்பாக மனத்தாலே பாவகமேபண்ணி
ஆக்கியே மேலேற அருள்தாவென்று அஷ்டசித்து தந்துமே அனுப்பநன்று
போக்கியே ஐம்புலனைப் பொறியின்பக்கம் போகாமல் நிறுத்தவென்று போற்றிசெய்யே

விளக்கவுரை :

[ads-post]

53. செய்யவே மாலொடுலட்சுமிதானும் சித்தமகிழ்ந்தப்போது சித்தியீவார்
பையவே ஏறுதற்கு பலனுஞ்சொல்வார் பலபலவாந்தொழிலுனுட பக்குவமேசொல்வார்
உய்யவே இரக்காமல் சடந்தானிருந்த உறுதியாம் யோகத்துக்குண்மை சொல்வார்
ஐயவே அஷ்டாங்கமனைத்தும் பார்க்க அதற்கதற்கு வங்கமெலாம் அறிவிப்பாரே

விளக்கவுரை :


அநாகதம்

54. அறிவுக்கு மேலேறி யெட்டங்குலத்துக்கப்பால் அனாகதத்தின் வீட்டைக்கேளு
முறிவுக்கு முக்கோணமாருதற்கு முதிர்வளையம் பனிரெண்டிதழுமாகும்
பிரிவுக்கு சாகாவாகா சாகாபேரான சகசகானூடாட டாவாரூபமே
இறிவுக்குயிதமில் நிற்கும் அட்சரந்தான் ஏற்றமாஞ்சழித்திய துக்கிருப்புமாமே

விளக்கவுரை :


55. ஆமென்ற சிகாரத்தின் எடுத்தூடுவாகும் ஆண்மையாய் பூதமதுதேயுதானாகும்
தேனென்ன செம்மைநிறச் சிவப்புமாகும் தேய்வுடபீசமது றவ்வுமாகும்  
ஓமென்ற வொளிகோடி பானுவாரும் ருத்திரனும் ருத்திரியும் நடுவேநிற்பார்
கோமென்ற அவருடைய குணமேதென்னில் கொடும்பொசிப்புஞ் சோம்பலொடு பயமுந்தூங்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar