51. வீடாகதிரோதகையு மிருந்தவீடு
வெகுபோகங்காமியத்தைவிடுத்தவீடே
வாசாமனங்கலங்கி நின்றவீடு
மாயமெல்லாங்குடிகொண்ட மகத்தாம்வீடு
பேடாக்கருத்தழிந்து
பெண்ணைத்தேடி பேய்க்கூத்தாய் நின்றலைந்த பெரியவீடு
சாகாவரம் பழித்த சாதிவீடு
தன்வசமாய் வாசிகொண்டு தாக்கிடாயே
விளக்கவுரை :
52. தாக்கியே சந்திரமண்டலத்தில்
பூவை சகஸ்திரமாமிதழாலே தரிக்கப்பண்ணி
பாக்கியே பலபலதூபந்தானும்
பண்பாக மனத்தாலே பாவகமேபண்ணி
ஆக்கியே மேலேற அருள்தாவென்று
அஷ்டசித்து தந்துமே அனுப்பநன்று
போக்கியே ஐம்புலனைப்
பொறியின்பக்கம் போகாமல் நிறுத்தவென்று போற்றிசெய்யே
விளக்கவுரை :
[ads-post]
53. செய்யவே மாலொடுலட்சுமிதானும்
சித்தமகிழ்ந்தப்போது சித்தியீவார்
பையவே ஏறுதற்கு
பலனுஞ்சொல்வார் பலபலவாந்தொழிலுனுட பக்குவமேசொல்வார்
உய்யவே இரக்காமல்
சடந்தானிருந்த உறுதியாம் யோகத்துக்குண்மை சொல்வார்
ஐயவே அஷ்டாங்கமனைத்தும்
பார்க்க அதற்கதற்கு வங்கமெலாம் அறிவிப்பாரே
விளக்கவுரை :
அநாகதம்
54. அறிவுக்கு மேலேறி
யெட்டங்குலத்துக்கப்பால் அனாகதத்தின் வீட்டைக்கேளு
முறிவுக்கு முக்கோணமாருதற்கு
முதிர்வளையம் பனிரெண்டிதழுமாகும்
பிரிவுக்கு சாகாவாகா
சாகாபேரான சகசகானூடாட டாவாரூபமே
இறிவுக்குயிதமில் நிற்கும்
அட்சரந்தான் ஏற்றமாஞ்சழித்திய துக்கிருப்புமாமே
விளக்கவுரை :
55. ஆமென்ற சிகாரத்தின்
எடுத்தூடுவாகும் ஆண்மையாய் பூதமதுதேயுதானாகும்
தேனென்ன செம்மைநிறச்
சிவப்புமாகும் தேய்வுடபீசமது றவ்வுமாகும்
ஓமென்ற வொளிகோடி பானுவாரும்
ருத்திரனும் ருத்திரியும் நடுவேநிற்பார்
கோமென்ற அவருடைய
குணமேதென்னில் கொடும்பொசிப்புஞ் சோம்பலொடு பயமுந்தூங்கே
விளக்கவுரை :