போகர் சப்தகாண்டம் 3116 - 3120 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3116 - 3120 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3116. ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு அப்பனே யான்கண்டவரைக்குஞ் சொல்வேன்
நாச்சலுடன் எழுநூற்று சொச்சம்வீட்டில் நடுவாக மத்திமத்தில் சதுரம்போடு
வீச்சுடனே பதினைந்து வரைதான்போடு விவரமுடன் குறுக்கு வரை பதினைந்தாகும்
ஏச்சலுடன் நெடுகுவரை பதினைந்தாகும் எழிலான நூத்தியம்பதரையுமாச்சே

விளக்கவுரை :


3117. அறையான வீடுமுனை சூலல்போடு அப்பனே ரீங்காரங் கொண்டுமாறு
திரையோடு ஓங்காரமுள்ளடக்கி திட்டமுடன் எட்டியென்ற பீடமீதில்
முறையோடு மௌனமதாயிருந்துகொண்டு மூன்றெழுத்தும் ஐந்தெழுத்தும் ஓதித்தீரு
சிறையான வைரவனும் முன்னேநிற்பான் சீறலுடன் பிரணவத்தை யோதுவீரே

விளக்கவுரை :

[ads-post]

3118. ஓதுகையில் அஞ்செழுத்தை வுள்ளடக்கி உத்தமனே நவ்வெழுத்தை மவ்வெழுத்திலூணி
தீதுரவே பகையாளிதன்னை நோக்கி திட்டமுடன் கற்பூரவொலிதான்கொண்டு
காதலுடன் வட்சரத்தை வுள்ளமர்த்தி கருவாகச் செய்பவனே சித்தனாகும்
நோதலுடன் வஞ்சனத்தை கையில்தீட்டி நோக்கமுடன் செய்பவனே சித்தனாமே

விளக்கவுரை :


3119. ஆமேதான் பிரணவத்தை வுச்சரித்து ஆண்டவனைத் தாநினைத்து வருளும்வோதி
தாமேதான் பாதாள வஞ்சனத்தை தாரணியி லெல்லவரும் கண்டுமெச்ச
வேமேதான் சத்துரு மித்துருவு தானும் வேகமுடன் சென்றுமல்லோ வுறவுபேசி
நாமேதான் ரீங்காரம் வுள்ளடக்கி நாட்டமுடன் ஓங்காரம் உள்ளேபூட்டே  

விளக்கவுரை :


3120. பூட்டுகையில் பிரணவத்தையோதும்போது பொங்கமுடன் சத்துருமித்துருவுமாகும்
நாட்டுகையில் நசிமசிமசியென்றேயோத நாசமடா வஞ்சனத்தின் தயிலத்தாலே
வாட்டுகையில் குறளிமுதல் பூதபேதம் வஞ்சனாதேவிமுதல் வசியமாகும்
சூட்டுகையில் காலனவன் எதிரேநிற்கான் துரைராஜ வஞ்சனத்தின் மையின்போக்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar