போகர் சப்தகாண்டம் 3206 - 3210 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3206 - 3210 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3206. கீழான பதிதனிலே பிரதமையும் நிற்க கீர்த்தியுடன் கேடகமுந் தழுவிவிளையாட
தாழான பூமிதனில் கேடகமும்நின்று சட்டமுடன் பிரதமையும் யெகிரிகுத்த 
சாழான கோட்டைக்குள் சண்டைஅதிவேகம் சாங்கமுடன் பத்மயுகம் சரிமுறிதலாக
நீழான ஜெகஜால வித்தையிதுதானும் நீணிலத்தில் அதிதமெனும் பதுமைவித்தைதானே

விளக்கவுரை :


3207. பதுமையாங் கோட்டைக்குள் காவலதிகாரி பாங்குடனே எதிர்நின்று பேசும்படைதன்னை
புதுமையுடன் பிரதமைதான் எழுந்து புகழ்ச்சியுடன் கேடகத்தின் கீழிருந்து  
கதுமையுடன் கேடகத்தை தலைமேல்கொண்டு களிவுடனே சதாகாலம் நடிக்கச்செய்யும்
மதுரமுடன் யெட்சிணியால் பேசசெய்யும் மகாகோடி வினோதங்கள் இன்னங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3208. கேட்கையிலே கன்னிகையாள் பிரம்பெடுத்து கிருபையுடன் வசனிக்கும் போதுமங்கே
நீட்கமுடன் பிரதமையும் வாய்திறந்து நிட்சயமாய் முன்னின்று பேசும்பாரு
வாட்கையுடன் கேடகத்தின் உத்தம்கண்டு வளமையுடன் கைகொடுத்து வார்த்தைகூறும்
வேட்கமுடன் குறளியின்றன் வசியத்தாலே வேடிக்கை வினோதவித்தை பேசும்பாரே

விளக்கவுரை :


3209. பேசுகையில் மாந்தரெல்லாம் பிரமைகொண்டு பேருலகில் செப்பிடைகை வித்தைபோல
வீசுதமிழ்க் கலிவாணர் முனிவர்தாமும் விண்ணுலகில் இம்முறைபோல் சொன்னதில்லை
காசுபணஞ் செலவழித்தோர் கோடியுண்டு காசினியில் என்முறைபோல் செய்ததில்லை
மாசுமறை யில்லாமல் போகர்தாமும் வசனித்தோம் மானிடர்கள் பிழைக்கவென்றே  

விளக்கவுரை :


3210. பிழைக்கவென்றால் இன்னமொரு கருமானங்கேள் பேரான சீனபதி மாந்தருக்கு
தழைக்கவே காயாதி கற்பஞ்சொன்னேன் தாரிணியில் திரேதாயினுகத்திலப்பா
முழக்கமுடன் காலாங்கிநாதர்தாமும் முனிவருக்கு தானுறைத்த காயகற்பம்
வழக்கமது பிசகாமல் யானுமல்லோ வசனித்தேன் கலியுகமாய் மதலிற்றானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar