1581. போடவே தாளகமுஞ் சிவந்துமின்னும் போக்கான சரக்கதுவும் கட்டிப்போகும்
நீடவே வங்கமது போலேகாணும்
நீணிலத்தில் வாதிமெச்சும் வங்கமாச்சு
கூடவே வங்கமதை தானெடுத்து
குறிப்புடனே காரமது காலாய்ச்சேர்த்து
போடவே மூசைதனிலுக்கித்தீரு
பொங்கமுடன் தாரத்தின் வங்கமாமே
விளக்கவுரை :
1582. வங்கமென்றால் வங்கமது
சொல்லப்போமோ வளவான தாரத்தின் வங்கமாகும்
பங்கமொன்றுஞ் சொல்லாத
வங்கமாகும் படுமுன்னே சூதத்தைக் கட்டிக்கொள்ளும்
தங்கமென்ற லோகமதை
சரியாய்க்கூட்டித் தாக்கிடவே தங்கமது வங்கமாகும்
அங்கமுடன் தங்கமது
வங்கமானால் அவனியிலே வாதவித்தை பார்க்கப்போமோ
விளக்கவுரை :
[ads-post]
1583. போமென்று விடுகாதே
மைந்தாகேளு பொங்கமுடன் கெந்தியது நாலுக்கொன்று
வேமென்ற சிலையதுவு
மொன்றேயாகும் மிக்கான காரமதுவொன்றேயாகும்
பாமென்ற வீரமது வொன்றேயாகும்
சடுக்கான வளையலுப்பு வொன்றேயாகும்
யாமென்ற படிகாரமொன்றேயாகும்
பாங்குடனே விவையெல்லாம் ஒன்றாய்க்கூட்டே
விளக்கவுரை :
1584. கூட்டியே தானரைப்பாய்
ஜெயநீர்கேளு குறையாத சாரமென்ற ஜெயநீர்தன்னால்
தாட்டிகமாய் தானரைப்பாய்
நாலுசாமம் சட்டமுடன் ரவிதனிலே காயப்போடு
நீட்டமுடன் சரக்கதனை
பொடிதாக்கி நிலவரமாய் குழிக்கல்லில் பொடித்துக்கொண்டு
வாட்டமுடன் காசியென்ற
குப்பிகொண்டு வளமான சீலையது வேழுசெய்யே
விளக்கவுரை :
1585. செய்யவே காசிபென்ற
மேருதன்னில் சிறப்புடனே மருந்தெல்லாங் குகையிலிட்டு
பையவே மரக்காலால் கொண்டுமூடி
பாங்குடனே சீலையது வலுவாய்செய்து
மையவே சட்டிதனில்
மணல்தான்கொட்டி மார்க்கமுடன் மேல்சட்டி கொண்டுமூடு
துய்யவே சீலையது
வலுவாய்ச்செய்து தோராம வாலுகையிலேற்றிடாயே
விளக்கவுரை :

