போகர் சப்தகாண்டம் 3041 - 3045 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3041 - 3045 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3041. போடயிலே பற்பமது கடுங்காரந்தான் பொலிவான கண்டர்தமைக் கொல்லும்பாரு
சாடவே முன்போல வுமிழ்நீர்தன்னில் சட்டமுடன்தான்குழைத்து புடத்தைப்போடு
நீடவே கடுங்காரச்சுன்னமாகும் நேர்மையுடன் சத்துருவுக் காலமித்ரன்
வாடவே திரியாதே மைந்தாகேளு வளமுடனே சுண்ணமதை எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


3042. கொள்ளவே சூதமதுக் கணுவுபோடு கொடிதான யேமரசந் துள்ளிப்போகும்
விள்ளவே சூதமது மடிந்துதானால் வேகமுடன் கெவனமென்ற குளிகையாச்சு
மெள்ளவே குளிகையது கொண்டபேர்க்கு மேதினியில் சதாகாலம் சாவேயில்லை
உள்ளபடி காலாங்கி நாதர்பாதம் உத்தமனே நாம்வணங்கி பாடினோமே

விளக்கவுரை :

[ads-post]

3043. பாடினோம் போகரிஷி சொன்னமார்க்கம் பாருலகில் பொய்யாது மெய்யேயாகும்
தேடியே யிவ்வேதை முப்பின்மார்க்கம் தெளிவுறவே பாடிவிட்டேன் சத்தகாண்டம்
நீடவே நான்காவ திந்தகாண்டம் நீடவே சாகரம்போலிதுவேயாகும்
கூடவே ஏழாயிரங் காண்டமப்பா கூறவே முடியாது திண்ணந்தானே

விளக்கவுரை :


3044. திண்ணமுடன் இப்பாகம் யாருஞ்சொல்லார் திறமையில்லா சுந்தரனார் மறைந்தார்தாமும்
வண்டமுடன் கொங்கணவர் கரிதிசொல்லி வளமையுடன் தாமறைத்தார் பிண்டப்போக்கை
சுண்ணமுடன் செய்வதற்கு கொங்கணவர்பாதம் சுத்தமுடன் செயநீரை மறைத்துச் சொன்னார்
எண்ணமுடன் இடைக்காடர் தமராநந்தர் ஏத்தமுட னென்போலே சொன்னார்பாரே

விளக்கவுரை :


3045. சொன்னதினால் விதிமுறைகள் காணாதப்பா துரைகோடி முகங்கோடி தொந்தங்கோடி
வின்னமிலா செய்வதற்கு ரிஷிகள்தாமும் விட்டகுறை வெட்டவெளி என்றுவிட்டார்
நன்மையாய் நாதாக்களடிபணிந்து நலமுடனே பாடிவைத்தேன் முப்பூதிட்சை 
பன்னவே இந்நூலின் தீட்சைபார்த்து பாகமுடன் செய்பவனே வாதியாமே
விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar