போகர் சப்தகாண்டம் 3051 - 3055 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3051 - 3055 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3051. மூடவே மண்சீலை வலுவாய்ச்செய்து முனிநாதர் சொற்படியே புடமேபோடு
கூடவே கோழியென்ற புடத்தைப்போடு குணமுடனே புடமாறி எடுத்துப்பாரு
வாடவே சூதமது மடிந்துமேதான் வளமாக களங்கமது போலேயாகும்
தேடவே செம்புதனில் நூற்றக்கொன்று தெளிவான களங்கமதை கொடுத்திடாயே

விளக்கவுரை :


3052. கொடுக்கையிலே மாற்றதுவு மெட்டேயாகும் குணமான பொன்னதுவும் சவளைபோலாம்
விடுத்துமே பொன்னதனை வாரடித்து விருப்பமுடன் பூங்காவி புடத்தைப்போடு
கொடுத்திடவே மாற்றதுவும் பத்தேயாகும் தேராமப் பசுமைநிறச் செம்பொன்னேயாகும்
எடுத்துமே சிவாலயங்கள் கட்டநன்று எழிலான சூதமென்ற குருவுமாமே

விளக்கவுரை :

[ads-post]

3053. குருவான சூதமதைப் பின்னுமைந்தா கொப்பெனவே ரவியெடுத்து பானைக்குள்ளே
திருவான பரணைதனில் வைத்துபின்பு திகழுடனே கெந்திதனை களஞ்சிபோடு
மருவான பரணைமூடிப்பின்பு மார்க்கமுடன் புடம்போடக் கட்டிப்போகும்
வுருவான களங்கமது வாரும்பாரு வுத்தமனே களங்கெடுத்து செப்பக்கேளே

விளக்கவுரை :


3054. செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை செம்மையுடன் வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
ஒப்பமுடன் தானுருக்கி கொடுத்துப்பாரு ஓகோகோ நாதாக்கள் வித்தையாகும்
அற்பமென்று நினையாதே மைந்தாகேளு அரசர்களும் இந்தமுறை காணமாட்டார்
சொற்பமுடன் மாந்தருக்கு வுண்மையாக தோற்றவே இந்தமுறை தெளிந்திட்டேனே  

விளக்கவுரை :


3055. தெளியவே இன்னமொரு மார்க்கம்பாரு தோற்றமுடன் நாமுரைப்போம் மாந்தர்க்காக
ஒளுவுடனே சீனபதிமார்க்கத்தார்கள் ஒக்கமுடன் செய்துவரும் வித்தையாகும்
வெளியாக செத்தவரை காண்பதற்கு வெட்கமுடன் ஜாலமொன்று சொல்வேன்பாரு
வளியான வட்டாரந் தன்னிலேதான் வளமுடனே மாளியொன்று செய்தார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar