6171. தாமான மார்க்கமது
பொய்யேயாகும் சகலகலை யறிவதுவும் பொய்யேயாகும்
நாமான மோகனங்கள்
பொய்யேயாகும் நலமான வசியமுதல் மாற்றம்பொய்யே
வேமான முள்ளதொரு
வுச்சாடனங்கள் வெகுபிறட்டு தலைதிரட்டு மேதினிக்குள்
சாமானிய மானதொரு தேவசங்கம்
சட்டமுடன் வரவழைத்தல் பொய்யதாமே
விளக்கவுரை :
6172. பொய்யான செப்பிடுகள்
வித்தைபொய்யே பொங்கமுடன் தூலங்கள் சொல்லப்பொய்யே
துய்யகெஜ தரணமது
சுத்தம்பொய்யே துப்புரவாய் குளிசங்கள் எல்லாம்பொய்யே
வெய்யபுகழ் தேகமது
தானும்பொய்யே மேதினியில் இருப்பவரும் பொய்யேயாகும்
நையவரு மூகமதிலெல்லாம்
பொய்யே பொய்யே நாதாக்கள் சொல்லுமுறை சிலபொய்தானே
விளக்கவுரை :
[ads-post]
6173. தானான புலிப்பாணி தார்வேந்தா கேள் தண்மையுடன் சொல்லுகிறேன் தருமவானே
கோனேதான் உலகுபதி
மாண்பரெல்லாம் கோர்வையுடன் பலநூலுங் கற்றுமென்ன
வீணேதான் பொய்மெய்யும் அறியா
மாண்பர் விருதாவாய் சிவயோகஞ் செய்துகொண்டு
காணாமல் வையகத்தின்
உண்மைதன்னை கசடகற்றி மெய்யறிய மறந்தார்பாரே
விளக்கவுரை :
6174. பாரேதான் வையகத்தில்
தெய்வமுண்டு பாங்கான மோட்சமென்ற வீடுமுண்டு
நேரேதான் பாவிகட்கு
நரகமுண்டு நீடாழி யுலகமது யழிவதுண்டு
சீரேதான் வாதமது
மெய்யேயாகும் சிறப்பான குளிகையது மெய்யேயாகும்
வீரேதான் கற்பமது
மெய்யேயாகும் விருப்பமுடன் இறப்பதுவும் மெய்யதாச்சே
விளக்கவுரை :
6175. ஆச்சப்பா புலிப்பாணி
புனிதவானே அவனிதனில் இன்னமுண்டு கற்பங்கேளிர்
மாச்சலென்ற நன்னாரி
கற்பமப்பா மகத்தான கற்பமதை யாண்டுகொண்டால்
பாச்சலென்ற வுதிரமது
விஷங்காணாது பாங்கான தேகமது கனலேறாது
வீச்சுடனே நேத்திரங்கள்
குளிர்ந்துகாணும் வீரான சுவாசமது கீழ்நோக்காமே
விளக்கவுரை :