6176. நோக்கான மூலிகையாங்
கற்பந்தன்னில் நுணுக்கமுள்ள மாண்பர்களுங் கொண்டுவந்து
தாக்கான மதிமயக்கம்
பூண்டுகொண்டு வண்மையுடன் தவநிலைக்கு உறுதிகொண்டு
வாக்குமனம் சித்தமார்க்கம்
பொங்கி வளமையுடன் வளமையுடன் வாசியது கீழேநோக்கி
தேக்கமுடன் சிவயோக
பதியில்சென்று தேற்றமுடன் நெடுங்கால மிருக்கலாமே
விளக்கவுரை :
6177. இருக்கவே யின்னமொரு
மகத்துவந்தான் எழிலான புலிப்பாணி திலர்தவானே
பொருக்கவே காயாதி
கொண்டபேர்க்கு பொங்கமுடன் சீவனத்துக் கிடமேதென்றால்
திருக்கையிலே தானிருக்கும்
சிவனாராணை தீர்க்கமுடன் வாதமது புகலக்கேளும்
பெருக்கமுடன் காலாங்கி
நாதர்பாதம் பெருமையுடன் யான்வணங்கி கூறுவேனே
விளக்கவுரை :
[ads-post]
6178. கூறுவேன் ஜாதிலிங்கம்
பலந்தானொன்று கொற்றவனே முலைப்பாலில் வூரப்போடு
தேறுதலாய் முப்பொழுது
மானபின்பு தெளுவிருத்து லிங்கமதை யெடுத்து மைந்தா
மாறுபடா யெறிகாலன் பாலையப்பா
மார்க்கமுடன் எண்சாமம் சுருக்குத்தாக்கு
வீறுடைய குமரியின்தன்
பாலால்தானும் விருப்பமுடன் நாற்சாமம் சுருக்குத்தாக்கே
விளக்கவுரை :
6179. தாக்கான லிங்கமதை
யெடுத்துபாலா தண்மையுடன் ஆராதாரச்சரக்காம்
போக்கான சரக்கதுவும்
ஏதென்றாக்கால் பொங்கமுடன் துருசு வெடியுப்புக்காரம்
நோக்கான சாரமுடன்
சீனந்தானும் நுண்மையுள்ள கரியுப்பு கூடச்சேர்த்து
வாக்கதுவும் பிசகாத
வண்ணமப்பா வளமையுடன் தீராஞ் செயநீர்தானே
விளக்கவுரை :
6180. தானான வாராதாரச்சரக்கால்
தாரணியில் அண்ட பிண்டந்தானுமாச்சு
கோனான குருவருளுங் காணலாகும்
கொப்பெனவே சத்திசிவ மாற்றிக்காண்பீர்
பானான செந்தூரக்
கட்டுப்போக்கும் பாங்கான களங்குமுதனாலாகும்
தேனான தேவி மனோன்மணியாள்
பாதந் தேர்ந்தெடுத்து வாராதாரந்தான்பாரே
விளக்கவுரை :