6181. பாரேதான் ஜெயநீரில் அனந்தம்போக்கு பாடினார் ஜெகதலத்தில் முனிவர்கோடி
நேரேதான் குருக்கிடையுங்
கருக்கிடையுமப்பா நெடிதான சாஸ்திரங்கள் அனந்தஞ்சொன்னார்
வேரேதான் சாஸ்திரத்தி
லிந்தப்போக்கு வேதைமுகங் காணுதற்கு குறிகள் சொன்னார்
நீரேதான் சாத்திரத்தின்
உளவுகண்டு நீதியுடன் ஆராதாரத்தைக் காணே
விளக்கவுரை :
6182. காணவே ஆராதாரத்தைக் கண்டால்
கனகமெனும் வாதமது கைக்குள்ளாச்சு
தோணவே லிங்கமது தன்னிலப்பா
தோறாமல் எண்சாமம் சுருக்குத்தாக்கு
வேணவே ஜெயநீரில் நின்றபாகம்
வேகமுடன் தூரதனில் நின்றசத்து
நீணவே சத்ததனை எடுத்து
மைந்தா நிகட்சியுடன் லிங்கமதிற் கவசம்பூசே
விளக்கவுரை :
[ads-post]
6183. பூசியே லிங்கமதிற் கவசம்போடு
புகழான லிங்கமது புடம்தான் பத்து
மாசில்லா லிங்கமது
மணல்தானப்பா மகத்தான புடமதுவும் பத்தேயாகும்
தேசியெனும் ஊசிநீர் ஆறாதாரம்
தெளிவுடனே சுருக்கதனால் கட்டும்பாரு
ஊசியெனுங் காந்தமது
லிங்கமப்பா வுத்தமனே வுருக்கதுபோ லிருக்கும்பாரே
விளக்கவுரை :
6184. உருக்கவே லிங்கமது எடுத்து
மைந்தா வுத்தமனே மேற்போக்கு கூறக்கேளும்
பொருக்கமுடன் சாரமென்ற
ஜெயநீர்தன்னால் பேரான தங்கமதை பத்துக்கொன்று
குருக்கியே தங்கமதை
ஜெயநீராக்கி கூசாமல் லிங்கமதில் சுருக்குத்தாக்கு
நெருப்பினிலே வைத்தாலே
சூடுதாக்கி நேரான ஜெயநீரை சுருக்குதாக்கே
விளக்கவுரை :
6185. தாக்கிடவே லிங்கமது
யிறுகிமைந்தா தண்மையுடன் வெட்டருக்கு போலேகாணும்
நோக்கிடவே மேற்போக்கு
புகலக்கேளும் நுட்பமுடன் தேனதனை சுருக்குதாக்கு
வாக்குடனே காலாங்கி
நாதர்பாதம் வண்மையுடன் அவர்பாதம் வணங்கியல்லோ
தீக்குழியில் அயமதனால்
கட்டிதன்னை தீர்க்கமுடன் தானெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :