6186. கேளேதான் லிங்கமதை இரும்பில்
வைத்து கெடியான தேனதனை மனதுவந்து
பாளேதான் போகாமல்
சுருக்குதாக்கு பட்சமுடன் லிங்கமது இருகிக்காணும்
சூளேதான் சுருக்கதுவும்
அறுபத்துநான்கு சுயமான தேனதனால் வுருக்குதாக்கு
மீளேதான் லிங்கமது
ஜெயக்கட்டாகும் மிக்கான கட்டதுவும் அரிதாம்பாரே
விளக்கவுரை :
6187. அரிதான கட்டதனை
எடுத்துமைந்தா வப்பனே சிற்றணடத் தயிலம்வாங்கி
பொரியான வெங்காரம்
பத்துக்கொன்று பொங்கமுடன் தயிலமதில் சேர்த்துமல்லோ
வரியான லிங்கமதை
சுருக்குதாக்கு வண்மையுள்ள லிங்கமது யிளகிக்காட்டும்
பரியான தங்கமது ஜெயநீர்
சேர்ந்து பாங்கான லிங்கமது மெழுகுமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6188. ஆச்சப்பா லிங்கமது
மெழுகேயாகும் வப்பனே மெழுகதனைப் பதனம்பண்ணு
காச்சலென்ற லிங்கமது
யிளகிக்காட்டும் கருவான லிங்கமது போக்குசொல்வேன்
மாச்சலது வாராமல்
லிங்கந்தன்னை மயங்காமல் கருவங்கச் சுத்திசெய்து
பாச்சலுடன் வங்கமதை லிங்கந்தன்னை
பட்சமுடன் தானுருக்கி யிடைதானீயே
விளக்கவுரை :
6189. இடையான இடையதுவும் என்னவென்றால் எழிலான சரியிடையே செப்பலாகும்
மடைபோன்ற வங்கமதை யுருக்கி
மைந்தா மயங்காமல் வுருக்கு முகந் தன்னிலீய்ந்து
கடையான தங்கமதில்
வங்கலிங்கம் கருவுடனே வுருகிநின்ற களங்குதன்னை
தடையறவே தங்கமதிற்
கொடுத்துமைந்தா சட்டமுடன் தானுருக்கி யெடுத்துப்பாரே
விளக்கவுரை :
6190. எடுத்து மிகப்பார்க்கையிலே
என்னசொல்வேன் எழிலான களங்கமது யேமவித்தை
கொடுத்ததொரு களங்குதனை
யெடுத்துபாலா தோறாமல் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
கொடுத்திடவே வுருக்கு
முகந்தன்னிலீய்ந்து கொற்றவனே செம்பதனை யூதிப்போடு
விடுத்ததொரு மாற்றதுவும்
என்னசொல்வேன் விட்டகுறை யிருந்தவர்க்கு லபிக்குந்தானே
விளக்கவுரை :