6191. தானான வெள்ளியது
என்னசொல்வேன் தண்மையுள்ள மாற்றதுவும் ஆறதாகும்
மானான மட்டநிகர்
நாலுக்கொன்று மகத்தான தங்கமது வொன்றுசேரு
தேனான தேவியுட கடாட்சத்தாலே
தேற்றமுடன் மாற்றதுவும் எட்டதாகும்
கோனான புடத்துக்கு
வுறுதிதங்கம் குவலயத்தில் ஆரறிவார் சித்தர்தானே
விளக்கவுரை :
6192. சித்தான சித்துமுனி
நாதர்தாமும் சிறப்பான ரிஷிதேவர் சொன்னமார்க்கம்
முத்தான வேதையிது
யின்னஞ்சொல்வேன் முனையான மார்க்கமது போலொண்ணாது
பத்தியுடன்
சிவராஜயோகிமாண்பர் பாலகனே செய்யும்வகை யனேகமுண்டு
சுத்தியுள்ள செம்பதுவும்
துலந்தானொன்று துறையான லிங்கமது துலந்தான் ரெண்டே
விளக்கவுரை :
[ads-post]
6193. துலமான செம்பதனில்
லிங்கம்ரெண்டு தூக்கான லிங்கமதைக் கிராசமீவாய்
நலமான யிருண்ட செம்பு
கட்டிப்போகும் நாற்றமுள்ள வூரலது யேகிப்போகும்
நலமான வூரலது யேகியல்லோ
சாங்கமுடன் திரைசகடும் அற்றுப்போகும்
குலமான தங்கமதைச் சரியாய்ச்
சேர்த்து குகைதனிலே தானுருக்கி யெடுத்திடாயே
விளக்கவுரை :
6194. எடுத்துமே மதிதனிலே
பத்துக்கொன்று எழிலான தங்கமதை தாக்குதாக்கு
கொடுத்திடவே மாற்றதுவும்
ஆறதாகும் கொப்பெனவே தங்கமது யெட்டிலொன்று
அடுத்துமே தான்கொடுத்து
வுருக்கிக்கொண்டு வப்பனே வாரடித்துப் புடந்தான்போடு
கொடுத்ததொரு மாற்றதுவும்
என்னசொல்வேன் தோறாமல் வயததுவும் ஏழதாமே
விளக்கவுரை :
6195. ஏழான பொன்னதுவும் பசுமைமெத்த
யெளிதான யேற்றமொன்று யின்னஞ்சொல்வேன்
தாழான மட்டமது மாற்றுகாணும்
தண்மையுள்ள பசுமையது என்னசொல்வேன்
காழான துருசினுட
செந்தூரத்தால் கருவான மாற்றதுவும் அதிகங்காணும்
சூழான சூதவித்தை யேமவித்தை
சுந்தரனே சொல்லவுந்தான் நாவொண்ணாதே
விளக்கவுரை :