6196. ஒண்ணாது இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
ஓகோகோ புலிப்பாணி யுகந்தபாலா
கண்ணான லிங்கமது
களஞ்சியொன்று கருவான நாகமது களஞ்சியொன்று
மண்ணான வாயுவென்ற
பிரிதிவிதானும் மகத்தான வங்கமது களஞ்சியொன்று
திண்ணமாம் லோகமதை
யொன்றாய்க்கூட்டி தீரமுடன் மூசைதனில் உருக்கிடாயே
விளக்கவுரை :
6197. உருக்கியே கண்விட்டு ஆடும்போது வுத்தமனே லிங்கமென்ற களஞ்சிதன்னை
பெருக்கியே வுருக்குமுகந்
தன்னிலப்பா பேரான லிங்கம் குருவொன்றீய
வருக்கமுடன் மூசைதனை
யாற்றிப்பாரு வளமான களங்கமது யென்னசொல்வேன்
சுருக்கமுள்ள சிமிட்டுவித்தை
வேதைதானும் துப்புரவாய் மூசைதனை யுடைத்துப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
6198. உடைத்துமிகப் பார்க்கையிலே
என்னசொல்வேன் வுத்தமனே லோகமென்ற களங்குலிங்கம்
தடையறவே மதியதுவும் ஏழதாகும்
தாக்கான ரவியதுவும் மூன்றதாகும்
கடையான களங்கமது வொன்றதாகும்
களங்கமற தானுருக்கி குருவொன்றீய
மடைபோன்ற களங்கமதைத்
தானெடுத்து மகத்தான வோட்டில்வைத்து வூதிப்போடே
விளக்கவுரை :
6199. போடேதான் கரியோட்டி
லூதும்போது பொங்கமுடன் வெள்ளியது சவளைபோலாம்
நாடேநீ செம்பகல வூதிப்போடு
நலமான பசும்பொன்னு யென்னசொல்வேன்
தேடேநீ புடமதனில்
தாக்கிப்பாரு தெள்வான தங்கமது ஜோதிமெத்த
ஆடேநீ ஜீவனத்தை செய்துகொண்டு
வப்பனே தவநிலையை சாதிப்பாயே
விளக்கவுரை :
6200. சாதிப்பா யின்னமொரு
கற்பஞ்சொல்வேன் சற்பாத்ரமுள்ள தொருமைந்தாகேளு
வேதினிலே ஏரிதன்னில்
வளருகின்ற மேன்மையுள்ள நத்தையது ஒன்றுவீதம்
ஆதியென்ற முப்பதுவும்
கூடச்சேர்த்து வப்பனே மண்டலந்தான் கொண்டாயானால்
நீதியுடன் காயமது கற்பமீறி
நீணிலத்தில் வெகுகால மிருக்கலாமே
விளக்கவுரை :