6201. இருக்கவென்றால் கோடிவரை
யிருக்கலாமே யெழிலான காலாங்கி யுண்டகற்பம்
திருக்கமலம் வீற்றிருக்கும்
தாயார்பாதம் தீர்க்கமுடன் எந்நாளும் மனதிலெண்ணி
வருத்தமுடன் நத்தையின்தன்
கற்பந்தன்னை வாகுடனே கொண்டவர்க்கு காயசித்தி
பெருக்கமுடன் முப்பூவின்
வலுமையாலே பேரான நத்தையது கற்பமாச்சே
விளக்கவுரை :
6202. கற்பமென்ற நத்தையது யாதென்றாக்கால்
கருவான பிரிதிவினில் வளர்ந்தபிண்டம்
சொற்பமென்று நினையாதே
துய்யபாலா துப்புரவாய் பிரிதிவினில் வளர்ந்த சொர்ணம்
விற்பனர்கள் ராஜாதி
யோகிமாண்பர் விருப்பமுடன் கொண்டருளும் காயகற்பம்
துப்புரவாய் இருந்தோர்க்கு
ஒன்றுமில்லை துறைகோடி வரைகோடி கற்பமாமே
விளக்கவுரை :
[ads-post]
6203. வரையான யின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி இந்திரகோபா
திரைமரைவு நேராமல்
முப்புமார்க்கம் செப்புகிறேன் உந்தமக்கு புனிதவானே
முறையான வழிபாடு முன்னந்தம்
முனையான சுருக்கமது இதிலடக்கம்
குறையாது சிடிகையென்ற
வேதையப்பா குவலயத்தில் சித்துமுனி சொல்வார்தானே
விளக்கவுரை :
6204. தானான மனோன்மணியாள்
கிருபையாலும் தாக்கான காலாங்கிக் கடாட்சத்தாலும்
தேனான முப்பூவின் வளமைதன்னை
தேற்றமுடன் வெளியாங்க மாகச்சொல்வேன்
பானான முப்பூவை
யெடுக்குமார்க்கம் பாலகனே முறைபாடு வழிபாடாகும்
மானான பங்குனியாம்
பருவந்தன்னில் மார்க்கமுடன் அமாவாசை பருவந்தானே
விளக்கவுரை :
6205. பருவமாம் வடக்குவெகு
தூரமப்பா பாங்கான வளர்பூமி தன்னிற்சென்று
உருவுடனே நடுச்சாம
வேளைதன்னில் வஉத்தமனே மனோன்மணியை மனதிலுன்னி
குருவான பூநீரை யெடுப்பதற்கு
கொற்றவனே வெடிகாலந்தன்னிலப்பா
பருவமுடன் பூர்க்குமந்த
முப்பூதன்னை பட்சமுடன் தானெடுத்து வரையக்கேளே
விளக்கவுரை :