போகர் சப்தகாண்டம் 1441 - 1445 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1441 - 1445 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1441. நூலான வாயிரத்திருநூறு சொன்னேன் நுணுக்கமாஞ் சொச்சங்கள னேகம்சொன்னேன்
பாலான வைநூறு கறுகிடையும் சொன்னேன்பாலகனே யெந்நூல்போ லாறுஞ்சொல்லார்
சேலான சுருக்கிடையுங் குருக்கிடையுஞ் சொன்னேன் சிறப்பான ஜோதிமுமந்நூறு சொன்னேன்
மூலான காலாங்கிநாயர்தம்மை முடிவணங்கி யடியேனும் தொழுதிட்டேனே

விளக்கவுரை :


1442. மொழிந்திட்ட பாஷாணம் பலமொன்றாகும் முனையான ரசமதுவும் வொன்றேயாகும்
வழிந்திட்ட பூரமது பலமொன்றாகும் வாகான இம்மூன்று மொன்றாய்ச்சேர்த்து
எழுந்திட்டு கல்வமதில் பொடித்துக்கொண்டு கருவான வறுவகை ஜெயநீர்தன்னால்
பிழிந்திட்டு தானரைத்து பில்லைதட்டி பசகாமரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :

[ads-post]

1443. போட்டுமே சட்டியிலே பில்லைவைத்து பொங்கமுடன் மேற்சட்டி கவிழ்த்துமூடி
நீட்டமுடன் சீலையது வலுவாய்ச் செய்து நேரானவடுப்பில்வைத்து யெரித்துநேராய்
வாட்டமுடன் நாற்சாமம் யெரிக்கும்போது வளமான பற்பமது பதங்கமேறி
சட்டமுடன் மேற்பட்டி மேலேநிற்கும் யெழிலான பற்பமது சொல்லப்போமோ

விளக்கவுரை :


1444. சொல்லவேபற்பமது தனையெடுத்து சத்துள்ள செம்புதனில் பத்துக்கொன்று
மெல்லவே தானுறுக்கி யெடுத்துப்பாரு வேதாந்த தாயினது வருளினாலே
புல்லவே செம்பதுவும் வெள்ளியால் பூதலத்தில் மானிடர்கள் பிழைக்கவென்று
மெல்லவே போகரிஷிமனமுவந்து மேதினியில் பாடிவைத்தா ருண்மைபாரே

விளக்கவுரை :


1445. உண்மையா மின்னமொரு கருமானங்கேள் உரைக்கிறன் மாணாக்கள் பிழைக்கவென்று
யண்மையா மயமதுவும் பலமொன்றாகும் தனியான பச்சையது பலமொன்றாகும்
கண்மையாம் ரசமதுவும் பலமொன்றாகும் காரமாம் வெண்காரம் பலமொன்றாகும்
வெண்மையாம் வெடியுப்பு ஜெயநீர்தன்னால் விருப்பமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar