போகர் சப்தகாண்டம் 1436 - 1440 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1436 - 1440 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1436. கசடகற்றி புத்தியள்ள இளைஞரானால் காசினியி லெந்நூலைக்கருதிப்பாரார்
நிசமுடைய சாத்திரமெல்லாம் அகற்றிநேரான சாத்திரங்கள் மெய்யென்றெண்ணி
விஷமுடைய முப்பூவின் மண்ணினாலே வேண்டியதோர் வளையல்களும் செய்வார்கோடி
குசமுடையவளையல் கார்க்காகார்காய்ச்சு மண்ணில் கூறவொண்ணா நஞ்சதுவு மிதக்கும்பாரே

விளக்கவுரை :


1437. பாரேதான் எந்நூலைப்பாராவிட்டால் பாங்கான முப்பதுவுங் காணாவிட்டால்
சீரேதான் வளையற்காற் நஞ்சானாலும் தீவரமாய்தானெடுத்து பூமுடித்தால்
நேரேதான் சரக்கெல்லாங் கட்டலாகும் நிலையாத சரக்கெல்லாம் நிற்கப்பண்ணும்
நேரேதான் வேதையிதுக்கோடும்வித்தை விழலாகப்போகாது வேண்டிச்செய்யே

விளக்கவுரை :

[ads-post]

1438. செய்யவே எந்நூலேழாயிரம்பார் ஜெகத்திலே மறைத்ததெல்லாம் வெளியாய்ச்சொன்னேன்
பையவே சத்தகாண்டம் பார்த்தாயானால் பாருலகில் நீயுமொரு சித்தனாவாய்
தொய்யவே பலபேர்கள் முனிவரானோர் தொல்லுலகில் பாடிவைத்தார் நூல்கள்பேதம்
மெய்யவே பலதுறைகள் பார்க்கவேண்டும் மேதினியில் நூல்பார்த்தோர் சித்தராமே
விளக்கவுரை :


1439. சித்தராம் எந்நூல்போலாருஞ்சொல்லார் ஜெகத்தினிலே கோடானகோடிநூல்கள்
பத்தியுடன் நானுரைத்தேன் மண்டலத்தில் பாகமுடன் எந்நூலைபார்த்தபேர்கள்
முத்தியுடன் காண்பதற்கு வழியுங்காண்பர் மூவுலகும் கிட்டவல்லோ கதியுங்காண்பர்
சத்தியுடன் பராபரியை தொழுதுபோற்றி சட்டமுடன் சத்தகாண்டம்பாடினேனே

விளக்கவுரை :


1440. பாடினேன் சத்தகாண்ட மேழுகாண்டம் பாங்கான யெழுநூறவொன்றுசொன்னேன்
பாடினே னென்னூறுவைப்பு சொன்னேன் பாங்கான திரட்டு வெழுநூறுசொன்னேன்
பாடினேன் முந்நூறு வொன்றுசொன்னேன் பதிவான ஞானமொரு நூறுசொன்னேன்
பாடினேன் சோடசமு மெட்டுஞ்சொன்னேன் பகரவே நிகண்டுவொரு நூலதாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar