போகர் சப்தகாண்டம் 1451 - 1455 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1451 - 1455 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1451. பாண்மையாம் யாகநிலை தவத்தில்நின்று பாங்குபெற சின்மயத்தை பணிந்துபோற்றி
கான்மையாம் காலாங்கி தனைநினைத்து கருத்துடனே எப்போதும் கடாட்சிக்கத்தான்
மேன்மையுடன் மனோன்மணியை மனதிலெண்ணி மிக்கான சுடரொளியைக் காணவென்று
வாண்மைபெற பராபரியை நிலையாராய்ந்து வாகுடனே சுருதிநிலை நின்றுபோற்றே

விளக்கவுரை :


1452. போற்றவே வஷ்டாங்கந் தன்னிற்சென்று புகழாக மேல்வரை மனதிலுண்ணி
ஆற்றவே வம்பரத்தை மேலேநோக்கி ஆராதாரச்சுடலை அருவித்தாண்டி
சீற்றவே லாகிரியிலணைத்துந்தள்ளி சித்தாந்த பாசமதையுள்ளடக்கி
நாற்றமென்னுந் துருத்திநிலை சமாதியாக்கி நடுவுநிலைபற்றியே தானமர்ந்துபோற்றே

விளக்கவுரை :

[ads-post]

1453. அமர்ந்துமே லிங்கமென்ற தாரந்தானும் அப்பனே பூரமுடன் வீரந்தானும்
சுமர்ந்துமே கெந்தியது துருசுதானும் சுடரான பாஷாண மிருதார்சிங்கு
தமர்ந்துமே சூதமுடன் துத்தந்தானும் தாக்கான வெடியுப்பு சீனந்தானும்
புமர்ந்துவே கெவுரியுடன் சாரந்தானும் பூட்டினார் சமயெடையாய் பூட்டினாரே

விளக்கவுரை :


1454. பூட்டவே வறுவகை ஜெயநிர்தன்னால் பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நீட்டமுடன் சிமில்தனிலே பதனம்பண்ணு நிலையான வெள்ளிதனி லிரண்டுக்கொன்று
தாட்டிகமாய்த் தகடடித்துப் பூசிப்பின்பு சாங்கமாய் காவிக்குள் புடத்தைப்போடு
வாட்டமுடன் புடமாறி யெடுத்துப்பாரு மாசற்ற வெள்ளியது பழுக்கும்பாரே

விளக்கவுரை :


1455. பாரப்பா வெள்ளியது பழுத்துமிக்க பாங்கான மாற்றதுவு மாறதாகும்
சீரப்பா வெள்ளியிடை யிரண்டுக்கொன்று சிறப்பாகத் தங்கமது வொன்றுசேரு
நாரப்பா நயப்புடனே வேதிக்கும்பார் நயமான பசுமையது சொல்லப்போமோ
கூரப்பா சிடிகையிது வேதைமார்க்கம் கூறினேன் போகரிஷி உண்மைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar