2356. எட்டான பொன்னதுவும்
அதிகங்காட்டும் எழிலான மின்னமொரு கருமானங்கேள்
திட்டமுடன் செந்தூர
மனுபானத்தில் தீரமுடன் தானருந்த மண்டலந்தான்
குட்டமென்ற பதினெட்டு
மகன்றுபோகும் கூறானமேகமது துள்ளியோடும்
சட்டமுடன் கயரோகம்
நீங்கிப்போகும் சாராது எந்நாளும் தளிர்ச்சியாமே
விளக்கவுரை :
2357. தாளிராகும் தேகமது வன்னிமீறும் சதாகாலம் சைதன்னியமதிகங்காட்டும்
குளிராது தேகமது கனலோவீசும்
குடியோடும் ரோகமெல்லாம் துலைந்துபோகும்
நளிரான நரம்புவளி
பிடரிநோயும் நாடாது திரேகம்விட்டு நளினமாகும்
பளியான காந்தியது
மிகவேவீசும் பான்மையாம் தேகமது பொன்னுமாமே
விளக்கவுரை :
[ads-post]
2358. பொன்னான தேகமது
காந்திமெத்தப் பொங்கமுடன் வாசியது கீழ்நோக்காகும்
மன்னவனே வஷ்டாங்கந்
தன்னிற்சென்று மானிலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
தென்பொதிகை சித்தனிலே
நீயொன்றாக தேசத்தில் சிவயோகியாக வாழ்வாய்
பன்னவே காலாங்கி நாயர்பாதம்
பணிந்துமே போகரிஷி பாடினேனே
விளக்கவுரை :
2359. பாடியே வின்னமொரு
மார்க்கம்பாரு பாங்கான புழுகென்ற குளவிதன்னை
நாடியே கானகத்தில்
தேடும்போது நலமான குளவிகளாம் விருட்சந்தன்னில்
தேடியே பார்க்கையிலே
மண்கூடாலே திரளான கூடதுதான் கட்டிருக்கும்
கூடியே மண்ணுக்குள்
திறந்துபாரு குறிப்பான மெழுகதுவும் உண்டாம்பாரே
விளக்கவுரை :
2360. பாரேதான் மெழுகெடுத்து
துருசுவெள்ளை பதமுடனே தான்சேர்த்து மெழுகதாக்கி
நேரேதான் ரவிதனிலே
பத்துக்கொன்று நேர்மையுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு
வேரேதான் கரியோட்டி
லூதிப்போடு வேகமுடன் செம்பதுவும் வர்ணங்காணும்
கூரேதான் மதிதனிலே
நாலுக்கொன்று கொடுத்துருக்க மாற்றதுவும் மாறதாமே
விளக்கவுரை :