2351. பொருந்தவே வின்னமொரு
புதுமைகேளு பொலிவான குளிகைதனை எடுத்துமைந்தா
திருந்தவே சூதமிடை
கெந்திசேர்த்து திறமுடனே மனோசிலையும் காலதாக
வருந்தவே தாளகமும் காலதாகும்
வாகான வீரமது வரிக்காலாகும்
குருந்தவே பொற்றலையின்
சாற்றாலாட்டி குமுறவே தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
2352. நாலான சாமமது வரைத்தபோது
நலமான மைனம்போலாகும்பாரு
காலான ரவிதனிலே காயப்போடு
கருத்துடனே பொடியாகச் செய்துகொண்டு
வேலான காசிபென்ற
குப்பிமைந்தா விபரமுடன் தான்வாங்கி செப்பக்கேளு
சீலான குப்பிக்குள் சிலையேழு
சிறப்புடனே தான்செய்து ரவியில்போடே
விளக்கவுரை :
[ads-post]
2353. போடவே குப்பிதனை
எடுத்துமைந்தா புகழாக மருந்தையெல்லாம் குப்பிக்காற்றி
நீடவே மாக்கல்லால்
கொண்டுமூடி நினைவாகத் தளவாயாஞ் சட்டிதன்னில்
நாடவே மணல்தனைக் கொட்டிபாலா
நன்மையுடன் குப்பிதனை நடுமையத்தில்
சூடவே குப்பிநடுமையம்வைத்து
சூட்சமுடன் மணல்தனை மேலேகொட்டே
விளக்கவுரை :
2354. கொட்டியே
மேற்சட்டிகொண்டுமூடி கோலமுடன் சீலையது வலுவாய்ச் செய்து
திட்டமுடன் தானெரிப்பாய்
எட்டுசாமம் திகழாக வாறினபின் திறந்துபாரு
சட்டமுடன்
செந்தூரமென்னசொல்வேன் சார்பாக வருணன்போல் காந்தியுண்டாம்
பட்டசெம்பு நாலுடனே
வெள்ளியாறு பதமாகத்தான் சேர்த்து வுருக்கிடாயே
விளக்கவுரை :
2355. உருக்கியே வாரடித்துப்
புடத்தைப்போடு உத்தமனே செம்பதுவும் அகன்றுபோகும்
செருக்கியே
வெள்ளியெடைகாலத்தொன்று செம்மையுடன் தான்சேர்த்து வுருக்கித்தீரு
பெருக்கமுடன் இடைகண்டு
இனமும்கண்டு பேரான சேர்வைமுதல் உளவுகண்டு
நெருக்கமுடன் மாற்றதுவும் மேவலாகி
நேர்மையுடன் பசுமையது வெட்டதாமே
விளக்கவுரை :