போகர் சப்தகாண்டம் 121 - 125 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 121 - 125 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
121. உண்மையாய்ப் பவியாது யோகந்தானும் உறதியாம்பலவான நீசருக்கு
பண்மையாம் பாவமென கோபிக்குந்தான் பலியாது கொலைசெய்த பாவிக்கேற்கே
வண்மையாம் மத்திபமாம் புத்தியானோன் மருவான காமோகி மகத்தன்மூடன்
எண்மையாய் தாட்சிகளும் ஏற்றம்பொய்யோன் இடும்பனாம் அனியனொடு சோம்பர் தானே

விளக்கவுரை :


122. தானான பெண்ணைப்பார்த்தேங்கிப் பின்செல்வோன் தாக்கான கர்ம்மவரை தப்புமாபாவி
தானான சோகவிகாரந்தான் சோம்பன் துனையான மூத்தோரை தந்தைதாயை
ஆனான சங்மில்லாதேதான் வைவோனதிகமாம் வீணார்ப்பரானதூரன்
வேயூன வெறுங்கைவெகுதுஷ்டன் மூர்க்கன் வெகுபுல்லன் குருதோகிக்கும் பொய்யாமே

விளக்கவுரை :

[ads-post]

123. ஆமேயா காமியத்தா னடங்காக்காமன் அளம்பனான் எரிமுகத்தான் அதியபாண்டி
தூமைதுடைக்கின்ற சுகியில்லாச் சண்டாலன் சிவவேடந்தரிசிக்கில் தூஷிப்போன்தான்
வாமேவு கோன்பொய்யன் கோவியீனன் மகத்தானயீனாக்கன் வாதிதர்க்கன்
மாமேவு மாமிசத்தை வருந்தித்தின்போன் மதுவாகியிவர்களுக்கு யோகம்பொய்யோ

விளக்கவுரை :


124. ரோகத்தால் யிவர்களுக்கு நீந்தால்பாவம் உடனேதான் நரகெய்தி உழுதுவான்பார்
யாகதூவிவர்களர்ச்சிக்கலாகா அதிசயமாய் பிர்மத்தி யனுகும்பாரு
காகநூல்கர்ப்பத்தைச் சூட்டலாகா கண்காணா தூரத்தே சயமாய்நில்லு  
நாகநூல் ஞானத்தை விழித்தலாகா நாட்டினால் நரகெய்து நலங்குவாரே

விளக்கவுரை :


125. நலங்கவே யாருக்குக் கொடுப்பதென்றால் நாதாந்தவேதாந்த பிரமசாரி
மலங்கவே பலதூதிகர்மிகூர்மி மகத்தான சிவயோகிபதி மார்க்கத்தார்
துலங்கவே சுத்தசைதன்னியத்தோர் சொல்மொழிமதிவாத தூய்மையானார்
கலங்கவே தர்மமனுஷ்டித்தோர் சார்ந்தோர் கர்ப்புடைய மங்கையரைக் கருதார்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar