போகர் சப்தகாண்டம் 136 - 140 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 136 - 140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
136. மேலானவிந்துவின்மேல் நாதமொன்று மிக்கவதின்மேல்சத்தி யொன்றுகேளு
மாலானவிதின்மேலே சிவன்தானொன்று உற்றசிவனாரென்னில் வாராட்டியந்தான்
பாலான வதின்மேலே பரைதானொன்று பாருமந்தயெட்டல்லோ புரியஷ்டந்தான்
மாலானவிதினெட்டால் பிறப்பிறப்புமாச்சு வாரான புரியஷ்டமார்க்கந்தானே

விளக்கவுரை :


137. மார்க்கந்தான் புரியஷ்டங் கூத்தேகூத்து கோடிஜென்மமெடுத்து ஆடும்
ஏர்க்கவே புரியஷ்டத்தெழுவகைதோற்றம் எங்குமதுவிரிந்தாடப் பிரபஞ்சமாச்சு
பார்க்கத்தான் புரியஷ்ட பகவான்கூத்து பண்பாகவிதையறிந்து கூர்ந்துபாரு
தீர்க்கந்தான் பார்த்தறிந்த பெரியோர்தாமும் திறந்தோமே தன்னியதில் மேல்நிற்பாரே

விளக்கவுரை :

[ads-post]

138. நிற்பார்கள் பரைமேலே முப்பாழ்கேளு நீங்கியே கடுவெளிப்பாழாம துக்குள்ளே
ஒப்பார்க யொளிபாழாம் நிற்கும்பாரு உமாந்துமேலதைத்தாண்டி யுரைக்கக்கேளு
விப்பான வெளியொளிப்பாழ் விரைந்துபாரு மிதுமூன்றுவரை தாண்டவன் மனத்தாய்நிற்பாள்
கர்ப்பான மொழியுடையாள் தமரின்வாசல் தனிப்பரந்தான் போதமது வொன்றாம்பாரே

விளக்கவுரை :


139. போதமது தானென்று மதற்கேபாரு பேரானவகண்டமென்ற விளக்கேபேரு
மேதமென்ற தவன் கடுக்கவ்வனவேப் பாதம்சேர்ந்ததுகில் தமக்குள்ளே சேரலாகும்
ஆகமதுகண்டவர் கண்டவீதி ஆதியில்லை அந்தமில்லை யறியப்பாகும்
சேதமது போதமது மௌனமாகும் சேசரித மனக்கரலா சேரொட்டாதே

விளக்கவுரை :


மறுபிறவியில்லாமல்

140. சேராதுயென்று சொல்லி சிவயோகிதானும் நிலைத்து உன்னிப்பரையளவு யோடினாலுங்
கானானபிரவிவந்து யெய்தும்யெய்தும் கருவில் பிறந்தாலும் சிவயோகியாவான்
பாரான பிரையளவும் புரியஷ்டமாச்சு பண்பானவரைகடந்து வெளிப்பாழுற்றால்
ஆறான வெளிப்பாழை அண்டமென்று அர்ச்சித்துப் பார்த்தாக்கால் பிறவியொட்டாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar