1371. செய்துமே குக்குடமாம்
புடத்தைப்போடு சிறப்பான படமாறி யெடுத்துப்பாரு
நைதுமே களங்கினுட
மார்க்கக்தன்னை நாதாக்கள் தங்களால் சொல்லப்போமோ
வெய்துமே களங்குடனே
சூதஞ்சேர்த்து விருப்பமுடன் பரிசரியாய்க் கூட்டியேதான்
கொய்துமே தாளகமும்
கணக்காய்க்கூட்டி கொப்பெனவே ஜெயநீரிலரைத்திடாயே
விளக்கவுரை :
1372. அரைத்துமே மேருவென்ற குப்பிக்கேற்றி அப்பனே வாலுகையிலெரித்துமேதான்
திரைத்துமே குப்பியைத்தான்
சிலாகையிட்டுத் திறமுடனே பார்க்கையிலே சிவப்புமெத்த
யரைத்துமே செந்தூரப்
பதனம்பண்ணு பாங்கான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
முறைத்துமே தானுருக்கி
குருவொன்றீய முதிர்வான மாற்றதுவும் எட்டதாமே
விளக்கவுரை :
[ads-post]
1373. எட்டான மட்டமது நாலதாகும்
யெழிலான தங்கமது வொன்றுசேர்த்து
தட்டான மூசைதனி
லுருக்கித்தீரு தாக்கான வாரடித்துப் புடத்தைப்போடு
கட்டான தங்கமது
விரண்டுக்கொன்று கருவானபுடத்தங்கம் நயப்புகாணும்
கிட்டான வேதையிது
சித்தர்வேதை கெடியான ரிஷிமுனிவர் செய்வார்தாமே
விளக்கவுரை :
1374. தர்மமாமிருதாரு
சிங்கிசேர்தான் தயவான செவ்வாலம் பழந்தான்கொண்டு
பூமான தேங்காய்போல் அரைத்துருட்டிப்
பொலிவான சிங்கியைத்தான் பொதிந்துமூடு
கரமான சீலையது
வலுவாய்ச்செய்து கனமான புடமதுதான் போட்டாயானால்
வேதான சிங்கியது
கட்டிப்போடும் வெடியான யுப்பதுவும் கூடக்கூட்டே
விளக்கவுரை :
1375. கூட்டியே துருசுடைய
சுன்னந்தானும் குணமான சிங்கியுடன் சமனாய்ச்சேர்த்து
மாட்டியே தானரைப்பாய்
ஜெயநீராலே தாழ்வாகப் பில்லைதட்டிக் காயவைத்து
மாட்டிகமா யோட்டில்வைத்துச்
சீலைசெய்து மகிழ்ச்சியுடன் காயவைத்து புடத்தைப்போடு
நோட்டகமா யாறியபின்
னெடுத்துப்பாரு கொடிதான செந்தூரங் காணலாச்சே
விளக்கவுரை :

