1386. மூடவே குக்குடமாம்
புடத்தைப்போடு முனையான வங்கமது நீரைவாங்கி
நீடவே துய்யானுக்
கொப்பதாகும் நெடிதான வித்தையிது சொல்லப்போமோ
கூடவே வெள்ளிதனை சிலவுசெய்து
குறிப்பாக நிஷ்டையிலே யிருந்துகொண்டு
தேடவே சின்மயத்தை யாராய்ந்தோர்ந்து
சிவானந்த கிரிதனிலே நின்றுதாக்கே
விளக்கவுரை :
1387. தாக்கவே கரிவங்கவெட்டைகேளும்
தயவான தாளகமும் பலந்தான்வாங்கி
நோக்கவே மிருதாரு
சிங்கிதானும் நொடிதாகத் தானரைத்து வங்கத்தின்மேல்
தேக்கான ரவிதனிலே காயவைத்து
திறமாக வோட்டிலிட்டு சீலைசெய்து
போக்கான கோழஇயென்ற புடமேபோடு
பொங்கமுடன் வெட்டையது யாகும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1388. பாரேதானிப்படியே புடமேபத்து பாங்காகப் போட்டுவர பலனைக்கேளு
சீரேதான் வங்கமது வெட்டையாகி
சிறப்பாக சொருங்கியது மீறநிற்கும்
தூரேதான் வெட்டையது
வொன்றேயாகும் துடியான செம்பொன்று வெள்ளியொன்று
நேரேதான் தானுருக்கி
யெடுத்துப்பாரு நிலையான களங்கம்போலாகுந்தானே
விளக்கவுரை :
1389. தானான வெள்ளியென்ற
களங்குதன்னை தாக்கான கரியோட்டி லூதிப்போடு
வேனான வெள்ளியது
களங்குநீங்கி விருப்பமுடன் மாற்றதுவு மாறதாகும்
கோனான மட்டமது நாலுக்கொன்று
குணமான தங்கமது வொன்றுகூட்டி
பானான மாற்றதுவு மிகுதியாகி
பழுப்பான தங்கமது காணுந்தானே
விளக்கவுரை :
1390. காணவே வுப்புக்கும்
காவிக்கேகா கனமான வங்கமது தங்கமாகும்
பூணவே ஜெகஜோதி
தன்னைபார்த்துப் பொங்கமுடன் சின்மயத்திலிருந்துகொண்டு
வேணவே சுடரொளியின்
லபியைப்பார்த்து மிக்கான வஷ்டாங்க யோகஞ்சென்று
ஊணவே குருபதத்தை
வணங்கிப்போற்றி வுத்தமனே நடுமையம்பற்றிநில்லே
விளக்கவுரை :

