போகர் சப்தகாண்டம் 1416 - 1420 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1416 - 1420 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1416. வரைந்தாரே மானிடர்கள் பிழைக்கும்வண்ணம் வனாந்திரங்கள் குகைமுதலும் காணாற்கண்டு
துறந்தாரே குளிகையது பூண்டுகொண்டு துறைகோடி மலைகளெல்லாம் கண்டாராய்ந்து
பறந்தாரே மேருகிரி மேலேசென்று பாராதாட்சியெல்லாம் பார்த்துமெய்ச்சி
மறந்தாரே சித்தரிடம் விடைகள்பெற்று மருத்துவத்தை வெளியாக்கி மதிப்பிட்டேனே

விளக்கவுரை :


1417. மதிப்பிட்டே னின்னமொரு கருமானங்கேள் மாசற்ற மனவிரும்பு பலமோவைந்து
கதிப்புடனே பொடிபொடியாய் சன்னமாக கண்டிடைக்கு கெந்தியொரு பலமேபத்து
வெதுப்புடனே கையாளின் சாற்றினாலே விளங்கவே நாற்சாம மரைத்தபின்பு
துதிப்புடனே பில்லைதட்டி காயவைத்து துப்புரவாய் சட்டிதனில் பில்லைவையே

விளக்கவுரை :

[ads-post]

1418. வைத்துமே மேற்சட்டிக் குமரிச்சாற்றால் வப்பமுடன் தான்மூடிசீலைசெய்து
வைத்துமே தானெரிப்பாய் நாலுசாமம் மயங்காமல் எடுத்தப்பார் செந்தூரம்தான்
த்துமே செந்தூரந்தான் தனையெடுத்து தயங்காமல் மறுபடியும் கையான்சாற்றால்
பொய்த்துமே போகாமல் செந்தூரத்தை பொங்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


1419. நாலான செந்தூரம் பில்லைதட்டி நலமாக ரவிதனிலே காயவைத்து
மேலான சட்டிதனில் தான்பரப்பி விருப்பமுடன் பில்லைதனைமேலேவைத்து
பாலான சட்டிதன்னைக் கவிழ்த்துமூடி பாலகனே முன்போலச் சீலைசெய்து
சீலான வடுப்பேற்றி நாலுசாமம் சிவக்கவே தானெரிப்பாய் கமலமாமே 

விளக்கவுரை :


1420. கமலந்தானெரிப்பா யானபின்பு கருவாக யிப்படியே பத்துமுறைதானும்
விமலமாஞ் செந்தூரமிகவேசெய்து விருப்பமுடன் குப்பிதனில் பதனம்பண்ணு
புமலமாய் செம்புருக்கி நாலுக்கொன்று புகழுடனே செந்தூரங்கொடுத்தூது
தமலமாம் ரவிதானும் கட்டிப்போகும் தாக்கடா மதிதனிலே நாலுக்கொன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar