போகர் சப்தகாண்டம் 1426 - 1430 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1426 - 1430 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1426. தண்மையாம் பற்பமது பணமேதூக்கு சார்பான வெண்ணெயதுதன்னிற்கொள்ள
வண்மையாங் காயமது இருகிப்போகும் வாகான தேகமது மின்னல்தோன்றும்
குண்மையாந் தங்கமது வலுத்துப்போகும் குணமாக்கும் சிங்கியது கூறப்போமோ
நண்யாம் காயமது கற்றூனாகும் நாதாக்கள் செய்முறைதான் உண்மைபாரே

விளக்கவுரை :


1427. உண்மையாம் வீரமது பலமேவாங்கு ஓங்காரமுள்ளதொரு விலாங்கைத்தேடி
கண்மையாந் தயிலமதுயிறக்கிக்கொண்டு கசடகற்றி தயிலமதை சுருக்குத்தாக்கு
பண்மையாம் நாற்சாமம் வுறுக்குத்தாக்கு பளபளத்த வீரமது மெழுகுமாகும்
தண்மையாம் பரியதுவும் பத்துக்கொன்று தாழ்ச்சியுடன் தான்கொடுக்க வாங்கும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1428. வாங்கியதோர் மெழுகெடுத்து பதனம்பண்ணு வரிசைபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
ஓங்கியே கொடுத்தாக்கால் ஏழுகாணும் உத்தமனே தொண்டுபண்ணி வேலைவாங்கு
பாங்குபெற மட்டமது நாலுக்கொன்று பக்குவமாய்ப் பரியதுவும் மிகவேகூட்டி
தூக்கியே திரியாதே மைந்தாகேளு சுத்தமுடன் செய்துமல்லோ வழலைபாரே

விளக்கவுரை :


1429. வழலையென்றால் வழலையது சொல்லப்போமோ வளமாக நாதாக்கள் பாடிவைத்தார்
வழலையென்றால் சுந்தரனார் வழலையல்ல வரரிஷியும் சொன்னதொரு வழலையல்ல
வழலையென்றால் மச்சமுனி வழலையல்ல வன்பான சட்டமுனி வழலையல்ல
வழலையென்றால் கோரக்கர் வழலையல்ல வான்மீகிர் பாடினதும் விழலையாமே

விளக்கவுரை :


1430. ஆமேதான் கொங்கணரும் வழலையல்ல அப்பனே இடைக்காடர் வழலையல்ல
தாமேதான் டமரகனார் வழலையல்ல தாக்கான சிவசிவாக்கியர் வழலையல்ல
வேமேதான் சூதமுனி வழலையல்ல மிக்கான புஜண்டரும் வழலையல்ல
நாமேதான் சொன்னபடி வழலைமார்க்கம் மற்றுமுள்ள சித்தரெல்லாம் பாடினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar