1511. தங்கமுட னிடையாக
வொன்றாய்க்கூட்டி தாழ்மையுடன் தானரைப்பாய் கையான்சாற்றால்
துங்கமுன் நாற்சாமமரைத்துத்
துப்புரவாய்ப் பில்லைதட்டி காயவைத்து
பங்கமுடன் வாராமல்
ஓட்டிலிட்டு பாங்குபெற சீலையது வலுவாய்ச் செய்து
அங்கமுடன கோழியென்ற
புடத்தைப்போடு அப்பனே செந்தூர மாகுந்தானே
விளக்கவுரை :
1512. தானாக யிப்படியே
பத்துபுடம்போடு தாக்கான மூலிகையா லரைத்துப்போடு
வேனாக செந்தூரம் வீரமெத்த
வேதைக்கு வெகுதூரம் எட்டியோடும்
பானாக செந்தூரம் பதனம்பன்னு
பத்துக்கு வொன்றுகுடு வெள்ளிசெம்பில்
மாணாகேள் கொடுத்திடவே
வேதிக்கும்பார் மகத்தான மருந்தினுட போக்குதானே
விளக்கவுரை :
[ads-post]
1513. போக்கான செந்தூரங்
குன்றியுண்ணு பொங்கமுடன் மண்டலந்தான் கொண்டாயானால்
தூக்கான தேகமது கற்றூணாகும்
துலையாது வயதுமிக வதிதங்காணும்
நோக்கான நரைதிரையு
மற்றுப்போகும் நோய்தானுஞ் சடந்தனிலே மேவலாகா
பாங்கான கண்ணுரண்டும்
ஒளியேவீசும் பார்வைக்கு வருந்ததியுங் காணலாமே
விளக்கவுரை :
1514. காணலாம் சட்சத்திரம்
பகற்காலத்தில் கருவிழியு மொருக்காலுந் திரைதானில்லை
பூணலாம் தேகத்தை வுறுதிபண்ணு
போக்கான சட்டையது தள்ளிப்பாரு
வேணலாம் வெகுகால
மிருக்கலாகும் வேண்டியே சமநிலைக்கு சமாதிதேட
நீணளாம் வாசியது
மேல்நோக்காது நீணிலத்தில் நீயமொரு சித்தனாமே
விளக்கவுரை :
1515. சித்தனாம் கெடையாட்டஞ்
சொல்வேன்கேளு செழிப்பான துலாக்கோலா மூங்கிலொன்று
மத்தலாய் நூறடியாம்
பருவநீட்ட முனையான கொப்புக்கு கயிர்தான்நாலு
சுத்தமாம் வெட்டார
வெளியில்நின்று சுகமுடனே கால்நாட்டி பதுங்குமாட்டி
துத்தமுடன் முனைகிடையில்
காந்தம்வைத்து துறையான விரும்பினுட சட்டைபூணே
விளக்கவுரை :

