போகர் சப்தகாண்டம் 1516 - 1520 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1516 - 1520 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1516. பூணவே கைதனிலே மாத்திரைக்கோலும் புகழான நெற்றிதனி லைங்கோலமையும்
நாணவே மானிடர்கள் நடுங்கவென்று நாதாக்கள் மெச்சிடவே கச்சைபூண்டு
காணவே தலைதனில் கலசப்பானை கடினமுடன் பத்தொன்று வொன்றோடொன்று
வூணவே பானைதனில் காந்தம்பூசி வுத்தமனே கிடைதனிலே யேறலாமே

விளக்கவுரை :


1517. ஏறலாமுச்சிவரை கிடைமேல்நின்று ஏற்றமுடன் துத்தாரிவாயிலேந்தி
கூறலா மோடியென்ற வித்தைதன்னை குவலயத்தில் மெச்சடவே போகர்தாமும்
தேறவே மேல்நின்று காணந்தன்னில் திறமுடனே வாசியைத்தான் கீழ்நோக்காமல்
மாரவே பிரணவத்தைமாறி மார்க்கமுடன் நின்றுவிளையாடினாரே

விளக்கவுரை :

[ads-post]

1518. ஆடினார் சீனமென்ற தேசந்தன்னில் அன்புடனே மாணாக்கள் பிழைக்கவென்று
பாடினார் சித்தர்முனி சொன்னநூலைப் பரிவாகத் தானெடுத்து பாருவோர்க்கு
மூடினதோர் வுளமெல்லாம் மிகவேபார்த்து முயற்சியுடன் வெளியங்கமாகச்செய்தேன்
கூடினதோர் கருமான மெல்லாந் தேர்ந்து குறிகண்டு நிலைகண்டார் சீனத்தாரே

விளக்கவுரை :


1519. சீனபதி மானிடர்கள் செய்யுமார்க்கம் சித்தர்முனி ரிஷிதேவர் முறைககளாகும்
மானபதிமாண்பர் கருவாளியல்லோ மண்டலத்திலாருமில்லை பேருமில்லை
தானமுடன் கொச்சியென்ற மார்க்கத்தாரும் சட்டமுடன் செய்வார்க ளிவர்போல
மோனமுடன் தேவதா ரிஷிக்கொப்பாவார் மண்டலத்தில் சீனபதிமாந்தர்தாமே

விளக்கவுரை :


1520. தாமேதான் சத்தியங்களுண்டு தரணிதனில் பொய்சொல்வார் மாண்பர்தாமும்
வேமேதான் நீதிமனுமுறைகளுண்டு வெகுகோடி வத்தைகளுஞ்செய்வாரப்பா
போமேதான் பொய்யொன்றஞ் சொல்லமாட்டார் பொன்னுலகுக் கொப்பான மாந்தரப்பா
நாமேதான் கண்டபடி சொன்னேனப்பா நாட்டினிலே சீனத்துக் கிணையாகாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar