போகர் சப்தகாண்டம் 1526 - 1530 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1526 - 1530 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1526. சாரமென்ற ஜெயநீரி லரைத்துமைந்தா சாங்கமுடன் நாகத்துக் கங்கிபூட்டி
காரமென்ற சுண்ணாம்புச் சீலைசெய்து கருத்துடனே ரவிதனிலே காயவைத்து
ஈரமென்ற சீலையது காய்ந்தபின்பு யென்மகனே கோழியென்ற புடத்தைப்போடு
பாரமென்ற கண்ணதுவும் நீங்கியேதான் பளபளத்த வெள்ளியது வாகுந்தானே

விளக்கவுரை :


1527. தானான வெள்ளியது சிவத்துக்கொப்பாம் சங்கரனார்பூசைக்குகந்த வெள்ளி
கோனான வெள்ளிதனை கடையில்மாற்றி கொப்பனவே பூசையர்ச்சனைகள் செய்வாய்
பானான பரங்களுக்கு வன்னமீவாய் பட்சமுடன் கோயில்குளம் கட்டவேண்டும்
வேனான வந்தணராம் குருக்கள்மார்க்கு வேணவுசாரமது செய்யநன்றே

விளக்கவுரை :

[ads-post]

1528. செய்யவே திரிவாமி பூசைவேண்டும் சிறப்பான மனோன்மணியை நணுகவேண்டும்
பையவே சத்தியட பூசைவேண்டும் பாருலகில் தேவதைகள் வணக்கம்வேண்டும்
முய்யவே சதாநித்தம் போற்றிசெய்து மோட்சத்திற்கேகும்வழி தேடவேண்டும்
மையவே காலாங்கரதனை நினைந்து மண்டலத்தில் வாழ்பவனே யோகவானே

விளக்கவுரை :


1529. யோகமென்றால் யோகமதுசொல்லப்போமோ யொளியான வயிரவன்தன் பூசைசொல்வேன்
போகனென்னு மடியேனும் தாள்வணங்கி பொங்கமுடன் காலாங்கிநாதர்பாதம்
வேகமுடன் தாள்பணிந்து வணங்கிநின்று வேதாந்த தாயினது அருளும்பெற்று
சாலமுடன் நவகோண வாசலிட்டு சாந்தமுடன் கலசமது வைத்திடாயே

விளக்கவுரை :


1530. வைத்திடவே கலசமது நூலேசுற்றி யாருடனே தேங்காயை மேலேவைத்து
கைத்திடவே மாவிலையை கவசம்பூண்டு கலசத்தின் கீழுநவதானியங்கள்
மெய்த்திடவே தான்பரப்பி கலசம்வைத்து மேன்னையுடன் கலசமது யெதிர்நேராக
பைத்திடவே மஞ்சளென்ற பிள்ளையாரை பக்குவமாய் எதிர்வாசல் வைக்கநன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar